У нас вы можете посмотреть бесплатно சிந்தனைப்பள்ளி: “வணிகச் சமயக் கருத்தியலில் ஆணாதிக்கமும் சாதியமும்” பேராசிரியர் ந. இரவீந்திரன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
“தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்” தொடர் உரையாடல். “ வணிகச் சமயக் கருத்தியலில் ஆணாதிக்கமும் சாதியமும்” அன்பான தோழமை நெஞ்சங்களே! உங்களுக்கு எங்களின் வணக்கம்! இது உங்களின் “ஜீவா நாவா தமிழ்” சேனல். மண் சார்ந்து,மக்கள் சார்ந்து சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பிரச்சனைகளையும் கருத்தியல்களையும் விவாதப்படுத்தும் ஓர் உரையாடல் சேனலாகும். இந்த மெய்ந்நிகர் உரையாடல் மேடையை உங்களின் ஜீவாநாவா சிந்தனைப்பள்ளி, சிங்காரவேலர் சித்தாந்தப்பள்ளி மற்றும் பேராசிரியர் நாவா ஆராய்ச்சிப்பள்ளி ஆகிய இணையவழி பண்பாட்டுப் பள்ளிகள் வாரந்தோறும் திங்கள் புதன் வெள்ளி மாலைகளில் தொடர்ந்து நடத்தி வருகின்றன. மெய்நிகர் மேடைகளின் நிகழ்வுகள்தான், பெரும்பாலும், “ஜீவா நாவா தமிழ்” சேனலின் காணொளிகளாகப் பரிணாமம் அடைகின்றன. அந்த வரிசையில் இது 446 வது மெய்ந்நிகர் மேடையின் காணொளியாகும். இம்மேடை ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியின் அமர்வாக அமர்வாக, தமிழ்ப் பேராசிரியர் நா. இராமச்சந்திரனின் தலைமையில், 23.01.2026 புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் நிகழ்ந்தது. தகஇபெ திருவாரூர் மாவட்டச் செயலாளர் நீடாமங்கலம் சந்திரசேகரனின் இசைப் பாடலுடன் நடந்த இந்நிகழ்வில், பேராசிரியர் ந.இரவீந்திரன் “தமிழ்ப் பண்பாடு ஊற்றுகளும் ஓட்டங்களும்” என்ற பொதுப் பொருண்மையில் நடத்தி வரும் தொடர் உரையாடலின் 5 ஆவது உரையாடலாக, “வணிகச் சமயக் கருத்தியலில் ஆணாதிக்கமும் சாதியமும்” என்ற தனிப்பொருண்மையில் உரையை நிகழ்த்தினார். அ.ஜார்ஜ் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், உரையைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில், பொ. திராவிட மணி, எம் பி டெரன்ஸ் சாமுவேல், பீமா ராஜா ஆனந்தி, இ. முத்தையா, எஸ் கே கங்கா ஆகியோர் பங்கெடுத்தனர். அ. ஜார்ஜின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, எஸ் கே கங்காவின் புத்தர் மொழி மற்றும் நா இராமச்சந்திரனின் வள்ளுவர் மொழி வழியாக நகர்ந்து, வி. சைமனின் நிறைவுப் பாடலுடன் முடிவுற்ற மேற்படி நிகழ்வு முழுவதையும் இக்காணொளி கொண்டிருக்கிறது. நீங்கள் முதன் முறையாக இந்த சேனலுக்கு வருகை தந்திருக்கிறீர்கள் என்றால், சேனலின் சந்தாதாரராக ஆகுங்கள் என்று வேண்டுகிறோம். மேலும், காணொளிக்கு விருப்பக் குறியீடு இட்டு, காணொளியைக் கண்டு , அதன் மீதான கருத்துக்களையும் கருத்திடுகளையும் பதிவு செய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம். மட்டுமல்லாமல், ஜீவாநாவா தமிழ் யூடியூப் சேனல் குறித்து உங்கள் நண்பர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களும் நம் அறிவுப் பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு நல்லாதரவு நல்கிட உதவுங்கள் என்று மனதார வேண்டுகிறோம். உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்!