У нас вы можете посмотреть бесплатно சிந்தனைப் பள்ளி: மேடை 450: : "மார்க்சியமும் தமிழும்": மு வீரபாண்டியன் மாநிலச் செயலாளர் CPI или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மெய்ந்நிகர் மேடை 450 சிறப்பு நிகழ்வு “ மார்க்ஸியமும் தமிழும்” அன்பான தோழமை நெஞ்சங்களே! உங்களுக்கு எங்களின் வணக்கம்! இது உங்களின் “ஜீவா நாவா தமிழ்” சேனல். மண் சார்ந்து,மக்கள் சார்ந்து சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பிரச்சனைகளையும் கருத்தியல்களையும் விவாதப்படுத்தும் ஓர் உரையாடல் சேனலாகும். இந்த மெய்ந்நிகர் உரையாடல் மேடையை உங்களின் ஜீவாநாவா சிந்தனைப்பள்ளி, சிங்காரவேலர் சித்தாந்தப்பள்ளி மற்றும் பேராசிரியர் நாவா ஆராய்ச்சிப்பள்ளி ஆகிய இணையவழி பண்பாட்டுப் பள்ளிகள் வாரந்தோறும் திங்கள் புதன் வெள்ளி மாலைகளில் தொடர்ந்து நடத்தி வருகின்றன. மெய்நிகர் மேடைகளின் நிகழ்வுகள்தான், பெரும்பாலும், “ஜீவா நாவா தமிழ்” சேனலின் காணொளிகளாகப் பரிணாமம் அடைகின்றன. இந்த வரிசையில் 02.02.2026 திங்கட்கிழமை மாலை 06:30 க்கு நிகழ்ந்த மெய்ந்நிகர் மேடை 450 ஆவது மெய்ந் நகர் மேடையாகும். மேலும் பிப்ரவரி 2 என்பது பேராசிரியர் நாவாவின் நினைவு நாளாகும். எனவே 450 ஒரு சிறப்பு நிகழ்வாகக் கொண்டாடினோம். தகஇபெ மாநிலப் பொருளாளர் ப பா ரமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மு வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, “மார்க்சியமும் தமிழும்” என்ற பொருண்மையில் உரையாற்றினார். பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் த. அறம் மார்க்சியமும் தமிழும் வரலாற்றில் ஊடாடி நின்றதையும் பயணிப்பதையும் எடுத்துச் சொன்னார். பேராசிரியர் நா இராமச்சந்திரன் பண்பாட்டுப் பள்ளிகளின் வரலாற்றுச் சுவடுகளைத் தொட்டுக் காட்டினார். தகஇபெ திருவாரூர் மாவட்டச் செயலாளர் நீடாமங்கலம் சந்திரசேகரன் இசைப் பாடல் பாடினார். விவாத நேரத்தில், குமரேசன், எஸ் கே கங்கா, வரதராஜ பெருமாள், டி எஸ் நடராஜன், அய்யாறு புகழேந்தி ஆகியோர் பங்கெடுத்தனர். அதேபோல் நிகழ்வின் முடிவில் அளவளாவல் நேரத்தில், ந. ரவீந்திரனும் எஸ்.கே கங்காவும் பங்கெடுத்தனர். அ ஜார்ஜின் தமிழ்த் தாய் வாழ்த்து உடன் தொடங்கி, வி சைமனின் நிறைவு பாடலுடன் முடிவுற்ற இந்நிகழ்ச்சியை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் அருணாச்சலம் ஒருங்கிணைத்தார். மேற்படி நிகழ்வு முழுவதையும் இக்காணொளி கொண்டிருக்கிறது. நீங்கள் முதன் முறையாக இந்த சேனலுக்கு வருகை தந்திருக்கிறீர்கள் என்றால், சேனலின் சந்தாதாரராக ஆகுங்கள் என்று வேண்டுகிறோம். மேலும், காணொளிக்கு விருப்பக் குறியீடு இட்டு, காணொளியைக் கண்டு , அதன் மீதான கருத்துக்களையும் கருத்திடுகளையும் பதிவு செய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம். மட்டுமல்லாமல், ஜீவாநாவா தமிழ் யூடியூப் சேனல் குறித்து உங்கள் நண்பர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களும் நம் அறிவுப் பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு நல்லாதரவு நல்கிட உதவுங்கள் என்று மனதார வேண்டுகிறோம். உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்!