У нас вы можете посмотреть бесплатно சித்தாந்தப்பள்ளி: வீரமும் புகழும்: நெகிழ்வான இரண்டு குறிப்பான்கள் - எம் பி டெரன்ஸ் சாமுவேல் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தத்துவ உரையாடல் 88 இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் “வீரமும் புகழும்: நெகிழ்வான இரண்டு குறிப்பான்கள்” அன்பான தோழமை நெஞ்சங்களே! உங்களுக்கு எங்களின் வணக்கம்! இது உங்களின் “ஜீவா நாவா தமிழ்” சேனல். மண் சார்ந்து,மக்கள் சார்ந்து சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பிரச்சனைகளையும் கருத்தியல்களையும் விவாதப்படுத்தும் ஓர் உரையாடல் சேனலாகும். இந்த மெய்ந்நிகர் உரையாடல் மேடையை உங்களின் ஜீவாநாவா சிந்தனைப்பள்ளி, சிங்காரவேலர் சித்தாந்தப்பள்ளி மற்றும் பேராசிரியர் நாவா ஆராய்ச்சிப்பள்ளி ஆகிய இணையவழி பண்பாட்டுப் பள்ளிகள் வாரந்தோறும் திங்கள் புதன் வெள்ளி மாலைகளில் தொடர்ந்து நடத்தி வருகின்றன. மெய்நிகர் மேடைகளின் நிகழ்வுகள்தான், பெரும்பாலும், “ஜீவா நாவா தமிழ்” சேனலின் காணொளிகளாகப் பரிணாமம் அடைகின்றன. இந்த வரிசையில் இது 04.02.26 புதன்கிழமை மாலை 06:30 மணிக்கு நடைபெற்ற 451 வது மெய்ந்நிகர் மேடை நிகழ்வின் காணொளியாகும். பேராசிரியர் பொ. திராவிட மணியின் தலைமையில், பேராசிரியர் நா முத்துமோகனின் “இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்” என்ற நூலை அடியொற்றி நிகழ்ந்து கொண்டிருக்கிற தொடர் உரையாடலில், 41 வது உரையாடலாக, “வீரமும் புகழும்: நெகிழ்வான இரண்டு குறிப்பான்கள்” என்ற தலைப்பில் தத்துவப் பேராசிரியர் எம்.பி.டெரன்ஸ் சாமுவேல் உரையாற்றினார். உரையைத் தொடர்ந்து திராவிட மணி, கவிஞர் காமு, பீமராஜாஆனந்தி, ந. இரவீந்திரன், எஸ் கே கங்கா ஆகியோர் விவாதத்தில் பங்கெடுத்தனர். அ ஜார்ஜின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய இம்மேடையில், தகஇபெ மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் கோ கலியமூர்த்தி கவிதை வாசிக்க, அக் கவிதையின் மீது நித்யா கணேசன், கே. சுப்ரமணியன், அ.ஜார்ஜ், எஸ் கே கங்கா ஆகியோர் அபிப்பிராயம் சொன்னார்கள். கவிஞர் ரமணி மாடசாமி ராஜாவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிறைவுப் பாடலை வி சைமன் பாட, நிகழ்வு முடிந்த பின்னர் நடைபெற்ற அளவளாவில் ந. ரவீந்திரன், ரமணி மாடசாமி ராஜா, திராவிட மணி, கே சுப்பிரமணியன் ஆகியோர் உற்சாகமாகப் பங்கெடுத்தனர். மேற்படி நிகழ்வு முழுவதையும் இக்காணொளி கொண்டிருக்கிறது. நீங்கள் முதன் முறையாக இந்தச் சேனலுக்கு வருகை தந்திருக்கிறீர்கள் என்றால், சேனலின் சந்தாதாரராக ஆகுங்கள் என்று வேண்டுகிறோம். மேலும், காணொளிக்கு விருப்பக் குறியீடு இட்டு, காணொளியைக் கண்டு , அதன் மீதான கருத்துக்களையும் கருத்திடுகளையும் பதிவு செய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம். மட்டுமல்லாமல், ஜீவாநாவா தமிழ் யூடியூப் சேனல் குறித்து உங்கள் நண்பர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களும் நம் அறிவுப் பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு நல்லாதரவு நல்கிட உதவுங்கள் என்று மனதார வேண்டுகிறோம். உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்!