У нас вы можете посмотреть бесплатно 03.022 நமச்சிவாய திருப்பதிகம் | துஞ்சலும் துஞ்சல் இல்லாத | சம்பந்தர் தேவாரம் | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
03.022 நமச்சிவாய திருப்பதிகம் | துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் | திருஞானசம்பந்தர் தேவாரம் "வாழ்நாள் முழுவதும் எந்தவித குறையும் இன்றி வாழ்வதற்கு ஓத வேண்டிய திருப்பதிகம்." ஞானசம்பந்தப் பெருமான் தம் உபநயன நாளன்று பாடியருளியது. திருமுறை : மூன்றாம் திருமுறை 022 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் பதிக குரலிசை : திரு சிவ மகேஸ்வர ஓதுவார் "நமசிவாய" என்பது பகவான் சிவபெருமானுக்குரிய சிறப்பான மந்திரமாகும். ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையைப் பற்றி தனது இரண்டு பதிகங்களில் சிறப்பித்து கூறியுள்ளார். திருஞானசம்பந்தருக்கு உபநயனம் செய்ய விரும்பினார் சிவபாத இருதயார். அந்த உபநயனச் சடங்கில் "மறை நான்கும் தந்தோம்" என்றனர் அந்தண்ர். அப்பொழுது மந்திரங்களுக்கெல்லாம் முதன்மையுடையது உலகின் முழுமுதற் கடவுளின் திருவைந்தெழுத்தான "நமசிவாய" என்னும் மந்திரமே என்ற பேருண்மையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் இப்பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடினார் ஆளுடைப் பிள்ளையார். முதலில் ஓதிய இத்திருப்பதிகத்திலும், இறுதியில் ஓதிய "காதலாகி" என்னும் பதிகத்திலும் முதல் பாடல்களில் ஓதும் முறையை அறிவித்துள்ளார். "நெஞ்சகம் நைந்து நினைமின்" நினைத்தால் வாழ்வில் வரும் கூற்றம் முதலிய இடர்களை அகற்றலாம் - என்கிறது முதல் பதிகம். அதையே "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது" என்று சொல்கிறது, நிறைவுப் பதிகம். தேவாரம் அருளிய மூவருமே, தூலபஞ்சாக்கரமாகிய நமச்சிவாயத் திருப்பதிகம் ஒவ்வொன்றருளியுள்ளனர். துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே. ..... (01) மந்திர நான்மறையாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே. ..... (02) ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர் ஞான விளக்கினை ஏற்றி நன்புலத் தேனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர் ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே. ..... (03) நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே. ..... (04) கொங்கலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து அங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில் தங்கு அரவின் படம் அஞ்சு தம்முடை அங்கையில் ஐவிரல் அஞ்சு எழுத்துமே. ..... (05) தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே. ..... (06) வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே. ..... (07) வண்டமர் ஓதி மடந்தை பேணின பண்டை இராவணன் பாடி உய்ந்தன தொண்டர்கள் கொண்டு துதித்தபின் அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே. ..... (08) கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச் சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர்வணம் ஆவன அஞ்சு எழுத்துமே. ..... (09) புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச் சித்தத்தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே. ..... (10) நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன் உன்னிய அற்றமில் மாலை ஈர் ஐந்தும் அஞ்சு எழுத்து உற்றன வல்லவர் உம்பர் ஆவரே. ..... (11) பதிகப் பலன் : நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய கேடுகள் வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள். குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"