У нас вы можете посмотреть бесплатно செம்மை இசைக் கோவை -2 : எனக்கினிய எம்மான் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
செம்மை இசைக் கோவை -2 : எனக்கினிய எம்மான் பாடல் -1: பிறந்து மொழி, அற்புதத்திருவந்தாதி, காரைக்கால் அம்மையார். பாடல் வரிகள்: பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர். இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடர்உருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு. பாடல் -2: மத்தயானை, திருஎதிர்கொள்பாடி, சுந்தரர் தேவாரம். பாடல் வரிகள்: மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள் செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள் வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கை மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல் ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. செடிகொ ளாக்கை சென்று சென்று தேய்ந்தொல் லைவீழாமுன் வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள் பட்டு மயங்காதே கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை அடிகள் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. பாடல் -3: எற்றான் மறக்கேன், திருப்புக்கொளியூர் அவிநாசி - சுந்தரர் தேவாரம். பாடல் வரிகள்: எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே உற்றாய் என்றுன்னையே உள்குகின் றேன்உணர்ந் துள்ளத்தால் புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே. வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே. பாடல் -4: நின்னாவார், திருதாண்டகம், அப்பர் தேவாரம். பாடல் வரிகள்: நின்னாவார் பிறரின்றி நீயே யானாய் நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய் மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய் மறைநான்கு மானாயா றங்க மானாய் பொன்னானாய் மணியானாய் போக மானாய் பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை என்னானாய் என்னானாய் என்னி னல்லால் ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே. பாடல் -5: எனக்கினிய எம்மானை காரைக்கால் அம்மையார் அற்புதத்திருஅந்தாதி பாடல் வரிகள்: எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே யெனக்கரிய தொன்று. ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளாம் அது. பாடல் -6: தாயினும் நல்ல தலைவர், திருக்கோணமாமலை, திருஞானசம்பந்தர் தேவாரம். பாடல் வரிகள்: தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலங் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. பாடல் -7: சுண்ணவெண் சந்தனச் சாந்தும், அதிகை வீரட்டானம், அப்பர் தேவாரம். பாடல் வரிகள்: சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த் திங்கட் சூளாமணியும் வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ணல் அரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. பூண்டதொர் கேழல் எயிறும் பொன்றிகழ் ஆமை புரள நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போலவெண் ணூலுங் காண்டகு புள்ளின் சிறகுங் கலந்தகட் டங்கக் கொடியும் ஈண்டு கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. பாடல் -8: மெய்தான் அரும்பி மாணிக்கவாசகர் திருவாசகம். பாடல் வரிகள்: மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே. கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும் எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின்இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே. Chapters: 00:00 - 02:57 - பாடல் - 1 : பிறந்து மொழி 02:58 - 06:46 - பாடல் - 2 : மத்தயானை 06:47 - 09:47 - பாடல் - 3 : எற்றான் மறக்கேன் 09:48 - 12:06 - பாடல் - 4 : நின்னாவார், 12:07 - 14:21 - பாடல் - 5 : எனக்கினிய எம்மானை 14:22 - 17:14 - பாடல் - 6 : தாயினும் நல்ல தலைவர் 17:15 - 21:15 - பாடல் - 7 : சுண்ணவெண் சந்தனச் சாந்தும் 21:16 - 24:17 - பாடல் - 8 : மெய்தான் அரும்பி பாடல்களை பதிவிறக்கம் செய்ய : https://drive.google.com/drive/folder... செம்மை இசைகளை செம்மை செவி செயலியிலும் கேட்கலாம். Android : https://play.google.com/store/apps/de... IOS : https://apps.apple.com/in/app/semmai-... செம்மை வழியே ஆசான் ம.செந்தமிழன் முன்னெடுக்கும் செயல்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை அறிவிக்கும் WhatsApp தளம் : https://whatsapp.com/channel/0029Vant...