У нас вы можете посмотреть бесплатно 1008 மகளிர் கலந்து கொள்ளும் வேல் வழிபாடு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மனிதன் வாழ்வதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் கிடைக்கப்பெற்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நமக்கு எல்லாம் பெருமையே உணவு, கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் என அனைத்திலும் உச்சபட்ச வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய காலத்தில் வாழும் நாம் சௌகரியமாக வாழ்கின்றோமே தவிர சந்தோஷமாக வாழ்வதில்லை. அறிவியல் வளர்ச்சி, விஞ்ஞான முன்னேற்றம் என்று நம்முடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கடவுள் நம்பிக்கையையும், வழிபாட்டு முறைகளையும் மூட நம்பிக்கை என்று புறம் தள்ளியதே இதற்கான முக்கிய காரணணங்களில் ஒன்று. எந்த வாதி, மதமாக இருந்தாலும் கடவுள் வழிபாட்டிற்கு என்று ஒரு முக்கியத்துவத்தை அன்று முதல் இன்று வரை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வளர்ந்த நாடுகள் கூட நம்முடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றார்கள். உடல்நலம், மனவளம், குடும்பம், உறவுகள் என அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு இளமை காலம் முழுவதையும் பணம் சம்பாதிப்பதினும், சொத்து சேர்ப்பதிலும் செலவழித்து விட்டு பின் சம்பாதித்த அனைத்தையும் செலவிட்டு உடலையும் மனதையும் காக்க வேண்டியுள்ளது. பொறாமை, வெறுப்பு, பழிவாங்கும் உணர்வுபோன்றவை மேலோங்கி அனைவர் மனதிலும் நிம்மதியின்மையை உருவாக்கி இருக்கின்றது. மனிதன் வாழ்கின்றான். மனிதம் இறந்து விட்டது. மனிதம் இல்லாமல் மனிதனைக் காப்பாற்ற முடியாது. உணர்வு நிலை மாறினால் சூழ்நிலை மாறும். அந்த வகையில் நாம் செய்யக்கூடிய சில வழிபாட்டு முறைகள் மக்கள் உணர்வு நிலையில் ஒரு மாற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும், தொழில் வளர வேண்டும். குழந்தைகள் நன்றாகப் படிப்பதோடு ஒழுக்கத்தோடும், கட்டுப்பாட்டோடும் வளர வேண்டும். குடும்ப உறவு மேம்பட வேண்டும், பொள்ளாச்சி மண் செழிப்புற வேண்டும் மொத்தத்தில் மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த வேல் வழிபாட்டை நடத்த இருக்கின்றோம். நம் பகுதி முன்னேற வேண்டும், நம் பகுதி மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு பிரபஞ்ச சக்தியிடம் நமது கூட்டு பிரார்த்தனையை சமர்ப்பணம் செய்யும் இவ்விழாவில் தாங்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றேன். நன்றி. 1008 மகளிர் கலந்து கொள்ளும் வேல் வழிபாடு நாள் 03.02.2026 செவ்வாய்க்கிழமைஇடம்: காலை 8.30 மணி முளைப்பாரி, பால்குடம். வேல் ஆகியவற்றோடு பொள்ளாச்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலிருந்து ஊழ்வலமாக புறப்படுதல் : பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவிலில் வழிபாடு காலை 10.30 மணி காலை 11.30JXG திருமண மண்டபத்தை சென்றடைதல் மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை: சிறப்பு பூஜைகள் நடைபெறும்