У нас вы можете посмотреть бесплатно காதல் பொய்யானது или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
காதல் பொய்யானது #Trendingpoems #entertainment #இசையும் கதையும் #viral #music #lovestory #lovesong / @trendingpoems நீ போன பின் நான் யாரோ… நிழலாய் மாறிய உயிரோ… சிரிப்பெல்லாம் சிதறியதோ சுவாசமே சுமையாய்த் தோன்றியதோ… நீ போன பின் நான் யாரோ… நிழலாய் மாறிய உயிரோ…. பார்வை சொன்ன வார்த்தைகள் பாதியில் நின்று போனதே பாசம் தந்த வாக்குறுதி பஞ்சாய் பறந்து போனதே நீ போன பின் நான் யாரோ… நிழலாய் மாறிய உயிரோ… கையில் பிடித்த கனவெல்லாம் கண்ணீரில் நழுவிப் போனதே நெஞ்சம் நிறைந்த காதலெல்லாம் நொடியில் நொறுங்கிப் போனதே… நீ போன பின் நான் யாரோ… நிழலாய் மாறிய உயிரோ… உன் நினைவுச் சுமைதானோ என்னை தினமும் கொல்வது… உன்னோடு நடந்த பாதைகள் இன்றும் என்னை அழைக்குதே நீ போன பின் நான் யாரோ… நிழலாய் மாறிய உயிரோ… ஒரு நொடியில் உடைந்த மனம் ஒரு யுகமாய் வலிக்குதே உன்னை மறக்க முயன்றாலும் உயிரே என்னை எதிர்க்குதே… நீ போன பின் நான் யாரோ… நிழலாய் மாறிய உயிரோ… நீ சிரித்த நொடிகள் இன்று சாபமாய் மாறியதே… நீ தந்த நினைவுகள் இன்று நெருப்பாய் எரிகிறதே… நீ போன பின் நான் யாரோ… நிழலாய் மாறிய உயிரோ… உன்னை மறந்துவிடச் சொன்னால் உயிர் மறுப்பதேனோ உன்னை மறக்க முடியாமல் உயிர் துடிப்பதேனோ.. நீ போன பின் நான் யாரோ… நிழலாய் மாறிய உயிரோ… ஒருநாள் நீ திரும்புவாய் என்று நெஞ்சம் பொய் சொல்லுதே அந்த பொய்யை நம்பியே என் உயிர் இன்னும் வாழுதே நீ போன பின் நான் யாரோ… நிழலாய் மாறிய உயிரோ… இசையும் கதையும் காதல் பொய்யானது! நாயகன் அரவிந்த் ஒரு புத்திசாலியான சோம்பேறி. நாயகி நிவேதிதா நேர்மையான திட்டமிட்ட வாழ்க் கையில் நம்பிக்கை கொண்டவள். சுமாரான அழகி.நிவேதிதாவின் பெற்றோர் வசதியானவர்களாக இருந்ததால், அவள் தொழில் செய்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.உயர்தரப் படிப்போடு நின்று விட்டாள்.காலமும் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அவளும் தனக்கு வரப்போகும் துணைவரோ இப்படித்தான் இருக்கனுமென்று மனசுக்குள் ஏதேதோ கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருந்தாள். அரவிந்த் தனது தோழியின் திருமணத்திற்கு சென்னையிலிருந்து மதுரை வருகிறார். திருமண நிகழ்ச்சியில், அவனுக்கு எதேச்சையாக நிவேதிதாவைப் பார்க்க நேரிடு கிறது.பார்த்தவுடன் அவள் மேல் காதல் வருகிறது. ஆனால் அவளோ, அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.உண்மையில் அவளுக்கு சுறுசுறுப்பானவர்களைப் பிடிக்குமே தவிர, சோம்பேறிகள் பிடிக்கவே பிடிக்காது! அரவிந்த் அவளை ஈர்க்க என்ன செய்யலாம் என தீவிரமாக யோசனை செய்கிறான். ஓஹ் மனதில் உருவானதே நல்லதோர் திட்டம், அதன்படி தன்னைக் காதலிக்க வைக்கும் வரை, ஒரு புது ‘project manager’ மாதிரி நடிக்க முடிவு செய்கிறான்! அவன் நண்பர் அலுவலகத்தில் யாரும் இதைத் தெரியாமலே ஒரு போலி "நிறுவனம்" உருவாக்கி, வாட்ஸ்அப்பில் அவளோடு பேச ஆரம்பிக்கிறான். அவன் “உண்மையான” வாழ்க்கையை மறைத்து, அவளுக்கு புதிது புதிதாக தினமும் சில சில வேலைகள் செய்து காட்டுகிறான்: குழந்தைகளுக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்கிறான் பாட்டியின் ஊருக்கு பயணம் போய், “சமூகசேவை” செய்து இருப்பது போல புகைப்படங்கள் எடுக்கிறான் இப்படியாக, அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது போல அரவிந்த் விரித்த வலையில் அவளும் விழுந்து விடுகிறாள்.நாட்களும் மெல்லமெல்ல நகர்ந்து செல்கின்றன. ஒரு நாள் அவள் அவனின் அலுவலகத்துக்கு வந்து surprise கொடுக்க நினைக்கிறாள். அப்போது தான் உண்மை வெளிப்படுகிறது, அவள் கோபத்துடன் பேசும் போது, அரவிந்த் நிதானமாக கூறுகிறான்: “நான் பொய் சொன்னேன்… ஆனா அது நான் உன் மீது வைத்துள்ள உண்மையான காதலுக்காக!” நிவேதிதா ஒரு தீர்மானத்துக்கு வருகிறாள். “ஆம், பொய்யில் ஆரம்பித்த வாழ்க்கை எனக்கு தேவையில்லை. So, goodbye மிஸ்டர் அரவிந்த் “ என்று கோபத்துடன் கூறிவிட்டுச் சென்று விட்டாள்.எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண் டிருந்த அரவிந்த் செய்வதறியாது சிலையாக நின்றுவிட்டான். அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்து விட்டது. இனிமேல் எச்சந்தர்ப் பத்திலும் எதனையும் பொய் சொல்லி சாதிக்க முடியாது என்று புரிந்தது. இனி அவனது மனக் குமுறல் சோக கீதமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது……