У нас вы можете посмотреть бесплатно மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் 25ஆவது வெள்ளி விழா! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை ஒத்துழைப்புடன் மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் 25ஆவது வெள்ளி விழா மாவட்ட மாநாடு அனைவருக்கும் நல வாழ்வை உறுதிப்படுத்துவோம் என்ற அடிப்படையில் கருத்தரங்கு கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலகக்கூடத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கு கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச அவர்களின் ஆலோசனையின்படி நடைபெற்றது. செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச அவர்கள் தனது தலைமையுரையில் உணவு முறைகள் மாற்று மருத்துவம் இவற்றை மாணவர்கள் மக்களிடம் எடுத்துச்செல்லவேண்டும் என்று கூறினார். கல்லூரி வேலை வாய்ப்புத்துறையின் பேராசிரியர் மகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். திரு சுரேஷ் தண்டபாணி மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் நலவாழ்வு இயக்கம் சென்னை அவர்கள் தொடக்க உரையாற்றினார். அவர் தனது உரையில் நேஷனல் ஹெல்த் மிஷன் மற்றும் ஆரோக்கிய இயக்கம் வரலாற்றையும் கிராம நகர்புற சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் நலவாழ்வு உரிமைகள் மக்களை தேடி மருத்துவம் நலவாழ்வும் மனித உரிமையே கூறினார். வழக்கறிஞர் மார்டின் அவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ள வேண்டும் என்றும் சுய மருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் சரிவிகித உணவு மற்றும் நலவாழ்வு ஓர் அடிப்படை உரிமை என்றும் தனது சிறப்புரையில் கூறினார். தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல் சயின்ஸ் சொசைட்டி மாநில செயலர் திருமதி சாந்தி நோயேற்ற வாழ்வே நமது செல்வம் இந்த விழிப்புணர்வு இளம் தலைமுறையினர் மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லவேண்டும் என்று தனது கருத்துரையில் கூறினார் குளித்தலை அரசு மருத்துவமனையின் மனநல ஆலோசகர் திருமதி மகேஷ்வரி அவர்கள் உடல்நலம் மனநலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் உணர்ச்சிகளின் வெளிப்பாடு உணர்வுகளை கையாளும் விதம் சுயபுரிதல் பற்றி உரையாற்றி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்திய வளர்ச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் திருமதி சரஸ்வதி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கவி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்திக்கேயன் வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்தின் திட்ட அலுவலர் பிரான்ஸிஸ் சேவியர் நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் மக்கள் நலவாழ்வு சங்க உறுப்பினர்கள் கல்லூரி மாணாக்கர்கள் சுமார் 92 பேர் கலந்து கொண்டனர்.