У нас вы можете посмотреть бесплатно 03.063 பைங்கோட்டு மலர்ப்புன்னைப் திருச்செங்காட்டங்குடி மூன்றாம்-திருமுறை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : மூன்றாம்-திருமுறை பண் : பஞ்சமம்நாடு :சோழநாடு காவிரித் தென்கரை தலம் : செங்காட்டங்குடி சுவாமி : கணபதீஸ்வரர்; அம்பாள் : திருகுழல் நன்மாது. பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச் சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே 1 பொன்னம்பூங் கழிக்கானற் புணர்துணையோ டுடன்வாழும் அன்னங்காள் அன்றில்காள் அகன்றும்போய் வருவீர்காள் கன்னவில்தோள் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேய இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே. 2 குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும் இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய் சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே. 3 கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும் மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய் தேனமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே. 4 ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும் பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய் சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே. 5 குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத் துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய் கறைக்கண்டன் பிறைச்சென்னி கணபதீச்சரம் மேய சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே. 6 கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய் ஒருவடியாள் இரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே. 7 கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழுந் தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய பேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே. 8 நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே யுலகெல்லாம் அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் அலர்கோடல் அழகியதே சிறப்புலவன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே. 9 இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10 செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட அந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவுஞ் சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே.11