У нас вы можете посмотреть бесплатно "விடையவன் விண்ணு மண்ணும்" சம்பந்தர் அருளியது குரலிசை by. நன்றி திருத்தணி சாமிநாதன் ஓதுவார் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தலம் i திரு ஒற்றியூர், சென்னை தொண்டை நன்னாட்டுத் திருத்தலம். இத்திருத்தலம் சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் இரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது. இறைவர் : ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத் தியாகர். இறைவியார் : திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம். தல மரம் : மகிழ மரம். தீர்த்தம் : பிரம தீர்த்தம். பண்: பஞ்சமம் பாடல் எண் : 1 விடையவன், விண்ணுமண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள் படையவன், பாய்புலித்தோல் உடை கோவணம், பல்கரந்தைச் சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்கவெண்தோடு உடையவன், ஊனம்இல்லி, உறையும் இடம் ஒற்றியூரே. பொழிப்புரை :சிவபெருமான் இடபவாகனத்தை உடையவன். விண்ணுளோரும் , இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவன் . கறைபடியாத மழுப்படை உடையவன் . பாயும் புலித்தோலுடையும் , கோவணமும் உடையவன் . பலவிதமான மலர்களைச் சடையில் அணிந்தவன் . சாமகானப் பிரியன் . சந்திரனைச் சடையில் தாங்கி, சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் காதணி அணிந்தவன் . குறைவில்லாத அப்பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் . பாடல் எண் : 2 பாரிடம் பாணிசெய்யப் பறைக் கண்செறு பல்கணப்பேய் சீரொடும் பாடல்ஆடல் இலயம் சிதை யாதகொள்கைத் தார்இடும் போர்விடையன் தலைவன்,தலை யேகலனா ஊர்இடும் பிச்சைகொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே. பொழிப்புரை : பூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட , பறைகள் கொட்ட , கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம் கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன் . கிண்கிணிமாலை அணிந்த போர்செய்யும் தன்மையுடைய இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன் . பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் . பாடல் எண் : 3 விளிதரு நீருமண்ணும், விசும் போடுஅனல் காலும்ஆகி அளிதரு பேரருளான், அரன் ஆகிய ஆதிமூர்த்தி களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி னோடுஅணிந்த ஒளிதரு வெண்பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே. பொழிப்புரை : ஓசையுடன் பாயும் நீர் , நிலம் , ஆகாயம் , நெருப்பு , காற்றுமாகி , மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்த காரணனாவான் . மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் . பாடல் எண் : 4 அரவமே கச்சதாக அசைத்தான்,அலர் கொன்றை அம்தார் விரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை மார்பன்,எந்தை பரவுவார் பாவம்எல்லாம் பறைத்து, படர் புன்சடைமேல் உரவுநீர் ஏற்றபெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே. பொழிப்புரை : சிவபெருமான் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்தவர் . கொன்றை மலர்மாலை அணிந்தவர் . வெண்ணிற முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர் . எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர் . அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் . பாடல் எண் : 5 விலகினார் வெய்ய பாவம் விதி யால்அருள் செய்து, நல்ல பலகினார் மொந்தைதாளம் தகுணிச்சமும் பாணியாலே அலகினால் வீசி,நீர்கொண்டு அடிமேல் அலர் இட்டுமுட்டாது உலகினார் ஏத்தநின்றான் உறையும் இடம் ஒற்றியூரே. பாடல் எண் : 6 கமையொடு நின்றசீரான், கழ லுஞ்சிலம் பும்ஒலிப்பச் சுமையொடு மேலும்வைத்தான், விரி கொன்றையும் சோமனையும், அமையொடு நீண்டதிண்தோள் அழகாயபொன் தோடுஇலங்க உமையொடும் கூடிநின்றான் உறையும் இடம் ஒற்றியூரே. பாடல் எண் : 7 நன்றியால் வாழ்வதுஉள்ளம், உலகுக்கு ஒரு நன்மையாலே கன்றினார் மும்மதிலும் கரு மால்வரை யேசிலையாப் பொன்றினார், வார் சுடலைப் பொடி நீறுஅணிந்து, ஆர்அழல்அம்பு ஒன்றினால் எய்தபெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே. . பாடல் எண் : 8 பெற்றியால் பித்தன்ஒப்பான், பெரு மான்கரு மான்உரிதோல் சுற்றியான், சுத்திசூலம் சுடர்க் கண்ணுதல் மேல்விளங்கத் தெற்றியால் செற்றஅரக்கன் உட லைச்செழு மால்வரைக்கீழ் ஒற்றியான் முற்றும்ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே. பாடல் எண் : 9 திருவின்ஆர் போதினானும், திரு மாலுமொர் தெய்வம்உன்னித் தெரிவினால் காணமாட்டார், திகழ் சேவடி சிந்தைசெய்து பரவினார் பாவம்எல்லாம் பறையப்படர் பேரொளியோடு ஒருவனாய் நின்றபெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே. பாடல் எண் : 10 தோகைஅம் பீலிகொள்வார், துவர்க் கூறைகள் போர்த்துஉழல்வார், ஆகமச் செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக் கூகைஅம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மின், ஏழுலகும் ஓகைதந்து ஆளவல்லான் உறையும் இடம் ஒற்றியூரே. பாடல் எண் : 11 ஒண்பிறை மல்குசென்னி இறைவன் உறை ஒற்றியூரைச் சண்பையர் தம்தலைவன் தமிழ் ஞானசம் பந்தன்சொன்ன பண்புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்தவல்லார் விண்புனை மேல்உலகம் விருப்பு எய்துவர், வீடுஎளிதே. பொழிப்புரை : ஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை , சண்பை என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் . பத்தையும் ஓதி வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து வீடுபேற்றை எளிதில் அடைவர் . திருச்சிற்றம்பலம்