У нас вы можете посмотреть бесплатно நகர் அப்ரதீஸ்வரர் கோயில் | நட்சத்திர தோஷம் & நவக்கிரக தோஷம் நிவர்த்தி தலம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நட்சத்திர தோஷம் மற்றும் நவக்கிரக தோஷம் நிவர்த்தி செய்து அருளும் நகர் அப்ரதீஸ்வரர் கோயில் பூராட நட்சத்திரக்காரர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு நிறைவான பலனைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மூலவர்: அப்ரதீஸ்வரர் அம்பாள்: அதுலசுந்தரி தலவிருட்சம்: மகா வில்வம் ஊர்: நகர் மாவட்டம்: திருச்சி தலவரலாறு ஒரு சமயம் அம்பிகை ஏகாந்தமாகத் தவமிருக்க விரும்பினாள். அதற்கான இடத்தைத் தேடியவள், அதுவரை யாரும் தவம் இருந்திராத ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தாள். புவி ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட பீதாம்பர யோகம் என்ற நிலையில், பூமிக்கு மேல் குறிப்பிட்ட உயரத்தில் மிதந்தவாறு, அசலன யோகம் என்ற அசைவற்ற யோக நிலையில் சர்வேஸ்வரனை நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள் அம்பிகை. அதை அறிந்ததும் யோக மாயையான அன்னையின் சக்தியால் இயங்கும், பிரபஞ்சத்தின் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் அத்தலத்தை வலமாகவும், இடமாகவும் வலம் வரலாயின. அசலனத் தவத்திலிருந்து நவமி திதி நாள் ஒன்றில், அன்னை மீண்டாள். அப்போது அத்தலத்தில் சூரிய சந்திரக் கிரகங்களும், கோடானு கோடி நட்சத்திரங்களும் வல இடமாக வலம் வந்து இறைவனை வணங்குவதைக் கண்டு அதிசயித்தாள் தேவி. சகலமும் ஒன்றாக வலம் வர அந்த இடத்தில் இருக்கும் இறைவனின் விசேஷமான சுயம்பு வடிவே காரணம் என்பதை ஞானபூர்வமாக உணர்ந்தாள். உடனே தேவி இறைவனை கோடானு கோடி சொர்ண வில்வ தளங்களால் பூஜிக்கத் தொடங்கினாள். மகிழ்ந்த சர்வேஸ்வரன் சுயம்பு லிங்க மூர்த்தியாகத் தோன்றி அன்னையின் சலனமற்ற யோகநிலையை வாழ்த்தி அருளினார். அன்னை மானுட வடிவில் சலனம் ஏதுமில்லா நிலையில் தியானம் இருந்ததால், அம்பிகைக்கு ‘அசல சுந்தரி’ என்ற பெயர் வந்தது. ஆலயத்தில் இறைவனின் திருநாமம் அப்ரதீஸ்வரர் என்பதாகும். அன்னைக்கு அதுல சுந்தரி என்ற பெயரும் உண்டு. கிரகங்கள் இங்கு ஒன்றாக நகர்ந்ததால் ‘நகர்’ என்று பெயர் பெற்ற தலம் இது. இங்குள்ள கல்வெட்டுளிலும் ‘நகர்’ என்ற பெயரே காணப்படுகிறது. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சுற்றிலும் உயரமான மதிற்சுவர் உள்ளது. முகப்பைத் தாண்டியதும் இடதுபுறம் திருக்குளம் இருக்கிறது. அடுத்துள்ள நுழைவு வாசலைக் கடந்ததும் திருச்சுற்று வருகிறது. பிரகாரத்தின் மேற்கில் தென் கயிலாசநாதர், சண்முகநாதர், வள்ளி - தெய்வானை, வட கயிலாசநாதர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கில் ஆதி மூலவரான நகரீஸ்வரரின் தனிக்கோவில் உள்ளது. இவரது சன்னிதிக்கு எதிரே ஆலயத்தின் தலவிருட்சமான மகாவில்வ மரம் இருக்கிறது. மற்ற வில்வ மரங்களைப் போல் இந்த மரத்தில் முட்கள் காணப்படவில்லை. காசியில் மட்டுமே இது போன்ற மரங்கள் காணப்படுவதாகக் கூறுகின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதியும், வட கிழக்கு மூலையில் நவக்கிரகங்களும் உள்ளன. தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மத்தியில் இருக்க மற்ற கிரகங்கள் சூரியனை பார்த்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது அபூர்வ அமைப்பாகும். கருவறையில் இறைவன் அப்ரதீஸ்வரர் லிங்கத்திருமேனியாக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் தஞ்சைப் பெரிய கோவிலில் இருப்பது போன்று மிக உயரமாக உள்ளது. இறைவனுக்கு எதிரே இரண்டு நந்திகள் உள்ளன. பிரதோஷ காலத்தில் இந்த இரண்டு நந்திகளையும் வழிபடுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். தல விருட்சமான மகா வில்வ மரத்தின் அடியில், ஒரு பெரிய சகஸ்ரலிங்கம் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த மரத்திற்கு சந்தனம், பூசு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு புத்தாடை அணிவித்து மரத்தையும், சகஸ்ரலிங்கத்தையும் வழிபட்டால் பித்ரு தோஷமும், இன்னபிற தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இத்தலத்து இறைவனையும், இறைவியையும் கோள்களே வழிபட்டதால், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு நட்சத்திர தோஷம், கிரகதோஷம் முதலியன நீங்கும் என்பது ஐதீகம். திருமணக் குழப்பங்கள் நீங்கவும், குழந்தைப்பேறு பெறவும் நவமி திதியில் இத்தலம் வந்து கோவில் பிரகாரத்தை இடம் வலமாகச் சுற்றி வந்து தரிசித்தால் உரிய பலன் கிடக்கும். இறைவனையும் இறைவியையும் கோள்கள் வழிபட்ட தலம் இது. எனவே இத்தல இறைவன் இறைவியை வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பதுடன், பூராட நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டு நிறைவான பலனைப் பெறலாம் என்று பக்தர்கள் நம்புவது உண்மையே. அமைவிடம் திருச்சி நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், லால்குடி சாலையில் மாந்துறையில் இருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது நகர் என்ற திருத்தலம். கோயில் Google Map Link https://maps.app.goo.gl/pEa3tBzoYxz8p... வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி தலம் • செய்வினையிலிருந்து நம்மை காக்கும் கஜசம்ஹார... மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 9655896987 if you want to support our channel via UPI Id nava2904@cnrb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRA... Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்