У нас вы можете посмотреть бесплатно வ்யதீபாத யோகத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய அரவூர் கார்கோடேஸ்வரர் கோயில் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வ்யதீபாத யோகத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய அரவூர் கார்கோடேஸ்வரர் கோயில் மூலவர்: கார்கோடேஸ்வரர் கோயில் அம்பாள்: மங்களாம்பிகை ஊர்: அரவூர் மாவட்டம்: திருவாரூர் தலவரலாறு அஸ்தினாபுரத்தினை ஆண்ட யுதிஷ்டிரனுக்கு பின் வந்த பரீக்ஷத் மகாராஜாவிற்கு பாம்பினால் அழிவு ஏற்பட்டது. அதனால் அவரது மகன் ஜனமேஜெயன் பின்னர் காலசர்ப்ப யாகம் செய்து உலகில் உள்ள எல்லா பாம்புகளும் அதில் வீழ்ந்து இறக்கும்படி செய்தான். அதில் தப்பிக்க கார்கோடகன் இந்த தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி தவம் செய்து இனி எவரையும் தீண்டமாட்டேன் என இறைவனிடம் வாக்கு கொடுத்த தலம் இது. அது முதல் இந்த ஊரில் எவரும் அரவம் தீண்டி இறந்ததில்லை. அது மட்டுமா, இறைவனே "இனி இத்தலம் வந்து எனை வழிபடுவோர்க்கு நாக தோஷம், ராகு - கேது தோஷமும் ஏற்படாது காப்பேன்' என்கிறார். பாம்பை அடித்து கொன்றவர்கள் ஒருமுறையேனும் இத்தல இறைவனை வணங்கி செயலுக்கு வருந்தினால் அவரது சந்ததியினரை இத்தோஷம் தொடராது. சுந்தர மூர்த்தி சுவாமிகள் இத்தலம் வந்து சோடச உபசார பூசை செய்து நற்பலன்கள் பெற்றதால் இந்த சுவாமியினை ஆராதிப்போர் சகல நன்மைகளும் பெறுவர் என்பது திண்ணம். ஆலய அமைப்பு இறைவன் கார்கோடகேஸ்வரர் கிழக்கு நோக்கியும் இறைவி மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவனின் நேர் எதிரில் மண்டபத்தின் வெளியே சிறிய நந்தி மண்டபம் உள்ளது. கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர் இருபுறமும் மகாவிஷ்ணுவும், பிரம்மனும் கைகூப்பிய நிலையில் உள்ளார்கள். வடக்கில் பிரம்மனும், துர்க்கையும் தென்மேற்கில் சிற்றாலயத்தில் விநாயகர் வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். இவ்வூரில் ஹோமகுளம் உள்ளது இந்த குளமே ஜனமே ஜெயன் ஹோமகுண்டம் ஏற்படுத்தி ஹோமம் செய்த இடம் எனப்படுகிறது. பிராத்தனை அவயோகமான வ்யதீபாத யோகத்தில் பிறந்தவர்கள் வழிபட தலம். நாக தோஷம் நீங்க ராகு கேது தோஷம் நீங்க கால சர்ப்ப தோஷம் நீங்க பித்ரு தோஷம் நீங்க வழிபட வேண்டிய தலம். வ்யதீபாத யோகத்தில் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபட வேண்டிய தலம். பொது தகவல் வரும் 15.02.2026 பித்ரு தோஷம் நீங்க இலவச தர்ப்பணம் நடைபெறும். அமைவிடம் தஞ்சாவூர் திருவாரூர் சாலையில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து கொரடாச்சேரி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் திருவாரூர் செல்லும் சாலையில் பயணம் செய்து வையகளத்தூர் என்ற ஊரில் இருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் பயணம் செய்து இத்தலம் அடையலாம். கோயில் Google Map Link https://maps.app.goo.gl/LtjFWaJbfPPv2... ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 8870560573 +91 9790246972 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 if you want to support our channel via UPI Id nava2904@kvb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRA... Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்