У нас вы можете посмотреть бесплатно மார்ச் - 19 அனுதினமும் தேவனோடு : வாழ்க்கை பேழை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!! மார்ச் - 19 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அனுதினமும் தேவனோடு : இன்றைய தலைப்பு : வாழ்க்கை பேழை 📘 “கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.” (1 தீமோத்தேயு4:7) கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, இன்றைய வசனமானது பவுல் அப்போஸ்தலர் ஒரு அறிவுரையாக நம் ஒவ்வொருவருக்காகவும் எழுதுகிறார். கட்டுக்கதைகளான வீண் பேச்சுகளுக்கு விலகி தேவ பக்தியான காரியங்களில் நம் நேரத்தை செலவுசெய்ய வேண்டும். நம் நேரத்தை கொள்ளையிடும் இந்த உலகத்தின் பொய்யான போதனைகளுக்குச் செவிகொடுக்காமல் தேவ சித்தத்தின்படியான போதனைகளுக்குச் செவிகொடுக்க வேண்டும். நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பாருங்கள். அதில் ஓடுவது முள் அல்ல உங்கள் வாழ்க்கை. உங்கள் வாழ்க்கையை கீழேத்தள்ள எதிர்பார்த்திருக்கும் கூட்டங்கள் அநேகம். அவர்களுடைய எதிர்மறையான வீண் வார்த்தைகளால் வாழ்க்கையில் எடுக்கும் முயற்சிகளை விடக்கூடாது. நாமும் வயதைக் காரணம் காட்டியோ, உலகம் பலவிதமாகப் பேசுவதினாலேயோ நம் வாழ்வில் தேவ சித்ததின்படியான நம்முடைய முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது. 🟢 விடாமுயற்சியின் வீரதந்தை: வேதாகமத்தில், நோவா 600 வயதிலும் அயராது உழைத்து, தேவன் தனக்குச் சொன்ன வார்த்தையின்படி ராட்சத பேழையை கட்டி முடித்தார். அந்த முயற்சியை அவர் மேற்கொள்ளும்போது அநேக விமர்சன உதடுகளும், கட்டுக்கதைகளும் நிச்சயமாகவே அவரை கடந்து போயிருக்கலாம். ஆனாலும் நோவா அந்த வீண் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காமல் தேவ பக்திக்கு ஏதுவாக முயற்சியை மேற்கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டார். ஒரு பறவை தனித்து பறக்க இறகுகள் மட்டும் முளைத்தால் போதாது; மனதளவிலே தன்னம்பிக்கையும் தைரியமும் முளைக்க வேண்டும். அதுபோல மனுஷ வாழ்விலும் வாய்ப்புகள் அநேகம் இருக்கலாம். ஆனால் தேவ நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டும் தான் வெற்றியாளராய் சிறகடித்துப் பறக்கமுடியும். இந்த கட்டுக்கதைகளுக்கு விலகி தேவ பக்திக்குள் வாழ்வோம். எனவே, முயற்சி எப்போதும் இகழ்ச்சியைத் தராது. விதைத்துக் கொண்டே இருங்கள். முளைத்தால் மரம்; இல்லையேல் உரம். நோவா கட்டினார் பேழை. நீங்களும் கட்டிடுங்கள் உங்கள் வாழ்க்கையை. கட்டுக்கதைகளுக்கு விலக்கிடுங்கள், விடாமுயற்சியினால் விண்ணையும் தொட்டிடுங்கள்! ஆமென். **********