У нас вы можете посмотреть бесплатно Abirami Anthathi -Few или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கணபதி காப்பு தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமிஅந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே. உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே. துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால், மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே. மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே. பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின்கரந்தவளே, கறைக் கண்டனுக்கு மூத்தவளே, என்றும்மூவா முகுந்தற் கிளையவளே, மாத்தவளே, உன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே? கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே, வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே, அளியேன் அறிவளவிற்கள வானத திசயமே. மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே, பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே. தொண்டு செய்யாதுநின் பாதம்தொழாது, துணிந்திச்சையே பண்டு செய்தார்உளரோ, இலரோ? அப் பரி சடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின்வெறுக்கை அன்றே. தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங் குழலாள், அபி ராமி கடைக்கண்களே. விழிக்கே அருளுண்டு, அபிராம வல்லிக்கு. வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழிகிடக்கப் பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே. மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி, என்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே. ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தங்கோன், போதிற் பிரமன், புராரி, முராரி பொதியமுனி, காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே. ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவிஅடங்கக் காத்தாளை, அங்குச பாசாங்குசமும் கரும்பும்அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.