У нас вы можете посмотреть бесплатно Thirumurugan 108 Pottri -Part 1 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
காப்பு : தமிழ் புஷ்பங்கள் இளையவருக்கு சாற்ற மூத்த கணபதியே முத்தமிழ் தடையின்றி தாரும் . !!கற்பக விநாயகா நின் தாள் சரணம் சரணம் !!! 108 போற்றி அகவல் அடியார்க்கு அருள் பாலிக்கும் கருணாமூர்த்தி பாதம் போற்றி போற்றி ஆபத்து என்று அழைத்தால் மயில் மேல் வலம் வரும் வித்தகன் பாதம் போற்றி போற்றி இயல் இசையால் திருப்புகழ் ஓசையை அன்போடு கேட்பான் இசைப்பிரியன் பாதம் போற்றி போற்றி ஈகை எண்ணம் கொண்டு அடியார்க்கு தொண்டு செய்யும் அன்பர்களுக்கு நலம் அளிப்பான் தேவன் பாதம் போற்றி போற்றி உலகெல்லாம் மயில் மேல் வலம் வந்து அடியார்களை அமரர்களாக ஆக்கும் பேரழகன் பாதம் போற்றி போற்றி ஊழ்வினை அடியார்களுக்கு செய்யும் உபாதைகளெல்லாம் வேல் கொண்டு தடுத்து அருளும் பெருமான் பாதம் போற்றி போற்றி எழும் அகந்தை அப்படியே அழிந்து போகச்செய்யும் விமலன் பாதம் போற்றி போற்றி ஏழு லோகங்களும் நிறைந்து ஒளியாய் வீற்று ஊருக்கும் வேந்தன் பாதம் போற்றி போற்றி ஐவர் அகத்தில் புகாமல் தன் வேலாயுததால் தடுத்து ஆட்கொண்ட பதம் அருளிய வேதப் பொருளோன் பாதம் போற்றி போற்றி ஒப்பில்லா கந்தன் நன்னூல் உரைப்பார் உளம் அருளும் தெய்வ தண்டை பாதம் போற்றி போற்றி ஓங்காரமாய் ரீங்காரமாய் மயில் மேல் அமர்ந்து பக்தருக்கு காட்சி அளிப்போன் தூயன் பாதம் போற்றி போற்றி ஒளடதம் திவ்ய நாமமே என்று நாள் தோறும் கூறும் பக்தர்கள் இதயத்தின் காவல் ரக்ஷகன் பாதம் போற்றி போற்றி கடல் அலை எண்ணங்கள் எழுந்தாலும் கருணை கொண்டு பிறவி அலை நீக்குவான் அயில் வேல் அரசன் பாதம் போற்றி போற்றி காருண்யம் அன்புள்ளம் தந்து எப்போதும் நிலையான ஞான வீடு அருளும் வள்ளல் பாதம் போற்றி போற்றி கிண்ணம் நிறைந்த பால், தேன் , தயிர் ,நெய் ,பழங்கள் கொண்டு பாஞ்சாமிர்தம் படைக்கும் அடியார்களின் பிரியன் பாதம் போற்றி போற்றி கீழ் மேல் செல்லும் ராட்டினம் போல் செல்லும் வாழ்க்கை சக்கரத்தின் விளைவுகள் இருந்து காக்கும் கடவுள் பாதம் போற்றி போற்றி குடை கொண்டு செல்வர் மழைக்கு யாரும் தடுக்க முடியா அருள் மழை அருளும் குணசீலன் பாதம் போற்றி போற்றி கூடா நட்பில் உழன்று இந்த மாயா உலகத்தில் உள்ள மாய மயங்கங்களை எளிதாக அழிக்கும் புண்ணியன் பாதம் போற்றி போற்றி கெடுதல் யார் நினைப்பின் அவர் செயலை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவார் சக்தி மைந்தன் பாதம் போற்றி போற்றி கேள்வி பதில் இல்லா நிலை அருளும் சிவா மைந்தன் பாதம் போற்றி போற்றி கை கூப்பி தொழும் அடியார் ஆபத்பாண்டவன் பாதம் போற்றி போற்றி கொட்டி கிடக்கும் தங்கம் வைரம் எல்லாம் கூட வருமோ புன்னகை கொண்டு இதயத்தை திருடுபவன் பொற் பாதம் போற்றி போற்றி கோலங்கள் பல கொண்டாலும் அன்பர் அகத்தில் ஒளி வீசும் திவ்ய தோற்றம் தந்து ஆட்கொள்ளும் அன்பன் பாதம் போற்றி போற்றி கௌமாரம் என்னும் சத்திய மார்கத்தை தந்து தர்மத்தை நிலை நாட்டும் தர்ம பிரபவின் பாதம் போற்றி போற்றி சந்தங்கள் அளித்து திருப்புகழ் மறை அளித்த தமிழ் கடவுள் பாதம் போற்றி போற்றி சாவும் பிணியும் அணுகா வரங்கள் தந்து உய்க்கும் பேரொளியின் பாதம் போற்றி போற்றி சிறிய வஞ்சனை கொண்டு திரியாமல் பெரிய சிந்தனை அருளும் கமல பாதம் போற்றி போற்றி சுடர் தீபம் பிரகாசம் அருள் ஒளி என அனைத்தும் ஆகி அண்ட சராசரம் ஆகி அன்பர்களை காக்கும் கருணை தெய்வம் பாதம் போற்றி போற்றி சூரியன் சந்திரன் இதர கோள்களும் தரும் இன்ப துன்பங்கள் ஒன்றும் செய்யா வண்ணம் காத்து அருளும் பரம்பொருளே போற்றி போற்றி செந்தமிழ் ஒன்று போதும் சிற்றடியை சேவிப்பதற்கு என்று கூறும் திருப்புகழ் மகிமையை அருளாளர் மூலம் அளித்த தேவன் பதம் போற்றி போற்றி சேவலும் மயிலும் என அபயம் அளித்து தடுத்து ஆட்கொண்டவன் அருள் வள்ளல் பிரான் பாதம் போற்றி போற்றி சைகை காட்டி அபாயக் கரம் நீட்டி " யாம் இருக்க பயம் ஏன் " என்று வியம்பியவன் திருப்பாதம் போற்றி போற்றி சொல்லும் செயலும் நீயே என்றும் சரணடைவார் பக்க துணை என்ற உறுதி அளிக்கும் திரு மூர்த்தி பாதம் போற்றி போற்றி சோகம் துக்கம் யாவும் நீக்கி அன்பும் அறனும் தந்தருளும் தயவனாவான் பாதம் போற்றி போற்றி சௌபாக்கியம் செய்தவர்ககள் அடியார்கள் என அவர்களை அன்பால் அரவணைக்கும் உன்னத பாதம் போற்றி போற்றி தன்னை தானே பக்தனின் இதயத்தில் இணைந்திருக்கும் அக ஒளி என்னும் அருள்வழி காட்டும் தூய ஜ்யோதி பாதம் போற்றி போற்றி தாங்கும் பாரம் எல்லாம் தன் மேல் ஏற்றி பக்தர் வலி அகற்றும் கருணை மூர்த்தி பாதம் போற்றி போற்றி திகட்டாத திருநாமம் திரும்ப திரும்ப உரைப்போர்க்கு உறுதியாய் காத்தருளும் கருணை பெரும் தெய்வம் பாதம் போற்றி போற்றி தீமை நன்மை இரண்டும் விளக்கி வாழ்வின் மூலாதாரத்தை உணர வைத்தவர் பாதம் போற்றி போற்றி தெள்ளு தமிழ் தேனை செப்ப வைத்தவர் கமலப் பாதம் போற்றி போற்றி தேன் தித்திக்கும் நா இனிக்க திருப்புகழ் தந்தவர் பாதம் போற்றி போற்றி தைக்க உடம்பான புது துணி இனி மேல் வேண்டாம் என்று ஆன்ம சொரூபம் அருளி பேரன்பை புகட்டிய ஞான குரு நாதர் பாதம் போற்றி போற்றி தொடரும் வினைகள் தொலை தூரம் விரட்டி கவனம் சிதறா வண்ணம் காத்தவன் பாதம் போற்றி போற்றி தோயக்க வேண்டிய துணி இது இல்லை இந்த உடம்பு பிறவி எடுக்கா வரம் தந்த ருளியவன் தூயோன் பாதம் போற்றி போற்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் தாழ்த்தாமல் ஒரு நொடியில் அனபர்களை கரை சேர்க்கும் சத்துவ குணம் கொண்டோன் பாதம் போற்றி போற்றி பாலின் வெண்மை நிறம் போல் அகத்தில் தூய்மை அளித்தோன் பாதம் போற்றி போற்றி புனிதமான திருப்புகழை முற்றிலும் உணர்ந்து ஓத குருவிடம் கொண்டு சேர்த்தவர் பாதம் போற்றி போற்றி பூ நார் நார் பூ ஒன்றோடு இணைந்து இருக்கும் மாலையாக ,அதே போல் பக்தரின் அன்பில் பிணைந்திருப்போன் பாதம் போற்றி போற்றி பெருமை யாது எனில் உன்னில் இரண்டற கலக்கும் குணம் என்று கொண்ட அன்பருக்கு அடைக்கலம் தருவோன் பாதம் போற்றி போற்றி பொறாமை சினம் கள்ளம் கபடம் அணுகா வண்ணம் தடுத்து புரிய வைத்தோன் பாதம் போற்றி போற்றி Will continue next part