У нас вы можете посмотреть бесплатно Thiruvaguppu 21,22,23,24 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அடியார்கள் வருமடி யவரிடம் வலியச நதம்வர வளர்ந்த சபையே கிளர்ந்த தொருபால் நினைவொடு பணிபவர் வினைதுகள் படஎதிர் நினைந்து திருநீ றணிந்த தொருபால் நிறைமல ரொடுநல கலவையும் உயர்குரு நினைந்து தரவே புனைந்த தொருபால் தினகரன் உலவுச நிதியினில் இரவலர் தெளிந்த தமிழே பொழிந்த தொருபால் சிவபர கிரியினில் ஒருசிவன் வடிவொடு திருந்த முருகோன் இருந்த கொலுவே. 21. வீரவாள் வகுப்பு (வீரவாகு தேவரின் வாட்படையின் சத்தியைக் கூறிற்று). தானனா தத்ததன தானனா தத்ததன தானனா தத்ததன தந்ததாத் தனனா பூவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு பூவில்யா வர்க்கும்வரு துன்புதீர்த் திடுமே பூதசே னைக்குள் ஒரு கோடிசூர் யப்பிரபை போலமா யக்கரிய கங்குல்நீக் கிடுமே பூதிபூ சிப்பரமர் தோலைமேல் இட்டதொரு போர்வைபோல் நெட்டுறைம ருங்குசேர்த் திடுமே போரிலே நிர்த்தம்இடு வீரமா லக்ஷ்மிமகிழ் பூசைநே சித்துமலர் தும்பைசாத் திடுமே பாவ்ரு பக்கொடிய சூரனார் பெற்றபல பாலர்மா ளத்தசைகள் உண்டுதேக் கிடுமே பாநுகோ பப்பகைஞன் மேனிசோ ரக்குருதி பாயவே வெட்டியிரு துண்டமாக் கிடமே பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்றுநரி பாறுபேய் துய்த்திடநி ணங்க்ளுட் டிடுமே பாடிஆ டிப்பொருத போரிலே பத்திரக பாலிசூ லப்படையை வென்றுதாக் கிடுமே ஆவலா கத்துதிசெய் பாவலோர் மெய்க்கலிக ளாமகோ ரக்களைக ளைந்துநீக் கிடுமே யாருமே அற்றவன்என் மீதொர்ஆ பத்துறவ ராமலே சுற்றிலும்இ ருந்துகாத் திடுமே ஆடல்வேள் நற்படைகள் ஆணையா வுக்குமுதல் ஆணையா வைத்துவலம் வந்துபோற் றிடுமே ஆலகா லத்தைநிகர் காலசூ லத்தையும றாதபா சத்தையும்அ ரிந்துபோட் டிடுமே மேவலார் முப்புரமும் நீறவே சுட்டஒரு மேருவாம் விற்பரமர் தந்தபாக் கியவான் வேடர்மா னுக்குமுயர் தேவயா னைக்கும்இசை வேலர்தா ளைத்தொழுது யர்ந்தவாழ்க் கையினான் வீறுசேர் மிக்ககண நாதனார் எட்டுவகை வீரர்நே யத்தமையன் என்றதோட் டுணைவோன் மேன்மையாம் லக்ஷரத வீரர்பூ சிக்கவரு வீரவா குத்தலைவன் வென்றவாட் படையே. 22. சிவகிரி வகுப்பு (சிவகிரி .. பழநி என்றாவது சிவகிரி என்னும் தனித்தலமாகவாவது கொள்ளலாம்). தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தனதானனா மெத்த மெத்த அக்ர மத்தின் மெத்த மெத்த விக்ர மத்தின் மெத்த மெத்த உக்ர வெற்றி மிகுபாசமே விட்டு விட்டு றுக்கு றுக்கு கட்டு கட்டு குத்து குத்து வெட்டு வெட்டெ னச்சி னத்து நமனாடியே சத்த மிட்ட தட்டி நெட்டெ யிற்றி னைக்க டித்து றுக்கு தர்க்க மிட்டெ னைப்பி டிக்க வருபோதிலே தத்த ளிக்கு புத்தி யைத்தி டப்ப டுத்தி யொத்தி டத்த ணிப்பு றுத்தி மெய்த்து ணைக்கு வரவேணுமே எத்த லத்து மெப்ப திக்கும் எப்ப டிக்கும் எச்ச ரித்து நற்ப தத்தை யுச்ச ரிக்கும் நினைவாகியே இட்டம் வைத்த வர்க்க நுக்ர கச்ச முத்ர வித்தை யிற்ப்ர சித்த நித்ய முத்த மிழ்க்கும் அருள்போதனே அத்ர பத்ர சித்ர மிட்ட யிற்ப டைத்த யிற்கி ணைத்த லர்க்க ணுற்ற பொற்கு றத்தி மணவாளனே அத்த னுக்கு மைக்கி தத்த புத்ர சித்தி முத்தி யைச்செ யற்பு தச்சி வக்கி ரிக்குள் முருகேசனே. 23. திருச்செந்தில் வகுப்பு தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தனதானனா சந்த பந்த முந்து விந்தை செஞ்சொ லின்ப்ர பந்த நந்து சங்க மங்க லம்பொ ருந்து தமிழ்பாடியே தஞ்ச மென்று சென்று சென்று நஞ்சு விஞ்சு நெஞ்ச வஞ்சர் தங்கண் முன்பு நின்று நின்று மெலிவோ தியே சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி யங்கி சிந்தி யிந்த வெங்கு டம்பை அழிபோதுமா சிங்க முன்பு குந்த தந்தி யின்கு லங்க லங்கு பண்பொ சிந்த துன்ப மென்றொ ழிந்து கரையேறுவேன் அந்த ரங்கள் அண்டர் அண்டம் மண்ட லங்கு லுங்க நின்ற சைந்த சைந்து பந்தெ ழும்ப அசுராதியோர் அங்க டங்கள் துண்ட துண்ட கண்ட பந்தி கண்டை வந்த லைந்து ருண்டு மண்டை சிந்த அடர்கோபனே கந்த சந்த நுங்கு கும்ப கொங்கை யிந்தி ரன்ம டந்தை கங்க ணம்பு ரந்த வென்றி அணிநேயனே கம்பு மஞ்ச முந்தி கழ்ந்தி ருந்தி டுந்தி றஞ்செ றிந்து. 24. திருப்பழநி வகுப்பு தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தனதானனா எந்தவினை யும்பவமும் எந்தவிட மும்படரும் எந்தஇக லும்பழியும் எந்தவழு வும்பிணியும் எந்தஇகழ் வுங்கொடிய எந்தவசி யுஞ்சிறிதும் அணுகாமலே எந்தஇர வுந்தனிமை எந்தவழி யும்புகுத எந்தஇட முஞ்சபையில் எந்தமுக மும்புகலும் எந்தமொழி யுந்தமிழும் எந்தவிசை யும்பெருமை சிதறாமலே வந்தனைசெய் துன்சரண நம்புதல்பு ரிந்தஅருள் வந்தநுதி னந்தனிலும் நெஞ்சில்நினை வின்படிவ ரந்தரஉ வந்தருள்இ தம்பெறுவ தன்றிநெடு வலைவீசியே வஞ்சவிழி சண்டன்உறு கின்றபொழு துங்குமர கந்தஎன நன்கறைய வுந்தெளிவு தந்துயிர்வ ருந்துபய முந்தனிமை யுந்தவிர அஞ்சலென வரவேணுமே தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி குண்டமட குண்டமட மண்டமென நின்றுமுர சந்திமிலை பம்பைதுடி திண்டிமமு ழங்கும்ஒலி திசைவீறவே தண்டஅமர் மண்டசுரர் மண்டைநிண மென்றலகை யுண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன்வ ணங்குபத தண்டைசிறு கிங்கிணிப லம்பிடவ ரும்பவனி மயில்வாகனா செந்தளிரை முந்துபடம் என்றுளம ருண்டுநிறை சந்தனவ னங்குலவு மந்திகுதி கொண்டயல்செ றிந்தகமு கின்புடைப துங்கிடவ ளைந்துநிமிர் மடல்சாடவே சிந்தியஅ ரம்பைபல வின்கனியில் வந்துவிழ மென்கனியு டைந்தசுளை விண்டநறை கொண்டுசிறு செண்பகவ னங்கள்வளர் தென்பழநி யம்பதியின் முருகேசனே.