У нас вы можете посмотреть бесплатно திருபட்டீச்சரம் | வாரம் ஒரு தேவாரம் | போகிற வழிக்கு புண்ணியம் l திருமுறை 3-73 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருபட்டீச்சரம் | வாரம் ஒரு தேவாரம் | போகிற வழிக்கு புண்ணியம் l திருமுறை 3-73 Video contents: 00:00 Intro 00:31 தேவாரம் முன்னுரை 02:34 திருபட்டீச்சரம் தேவார முன்னுரை 04:07 1. பாடல் மறை சூடல் மதி பல்வளையொர் பாகம் மதில் மூன்றோர் கணையால் 05:10 2. நீரின் மலி புன்சடையர் நீளரவு கச்சை அது நச்சு இலையதோர் 05:58 3. காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடியார் மறுகெலாம் 06:52 4. கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செஞ்சடையினான் 08:00 5. மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவார்க்க வரையார் 09:06 6. மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவார் 10:00 7. பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர் உலகு பேணல் உறுவார் 10:53 8. நேசமிகு தோள் வலவனாகி இறைவன் மலையை நீக்கி இடலும் 11:43 9. தூய மலரானும் நெடியானும் அறியார் அவன தோற்ற நிலையின் 12:33 10. தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடுபிண்டம் அது உண்டு உழல் தரும் 13:24 11. மந்தமலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறு அதனுள் பதிக எண்: 3.73 திரு பட்டீச்சரம் சாதாரி பாடல் 1: பாடல் மறை சூடல் மதி பல்வளையொர் பாகம் மதில் மூன்றோர் கணையால் கூட எரி ஊட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் மாட மழபாடி உறை பட்டிசரம் மேய கடி கட்டரவினார் வேட நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி வினை வீடுமவரே பாடல் 2: நீரின் மலி புன்சடையர் நீளரவு கச்சை அது நச்சு இலையதோர் கூரின் மலி சூலமது ஏந்தி உடை கோவணமும் மானின் உரிதோல் காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல் செய்து மேய நகர் தான் பாரின் மலி சீர் பழைசை பட்டிசரம் ஏத்த வினை பற்றழியுமே பாடல் 3: காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடியார் மறுகெலாம் மாலை மணநாறு பழையாறு மழபாடி மேய அழகாய மலி சீர் பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசரமே பரவுவார் மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்ணுலகம் ஆளும் அவரே பாடல் 4: கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செஞ்சடையினான் பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆடவல பான்மதியினான் மண்ணின் மிசை நேரில் மழபாடி மலி பட்டிசரமே மருவுவார் விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடனாதல் அது மேவல் எளிதே பாடல் 5: மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவார்க்க வரையார் பருவ மழை பண் கவர் செய் பட்டிசரம் மேய படர்புன் சடையினான் வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே பாடல் 6: மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவார் பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசரம் மேய பனி கூர் பிறையினொடு மருவியதோர் சடையின் இடை ஏற்ற புனல் தோற்ற நிலையாம் இறைவன் அடி முறைமுறையின் ஏத்தும் அவர் தீத்தொழில்கள் இல்லர் மிகவே பாடல் 7: பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர் உலகு பேணல் உறுவார் துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடிவீதி அழகாய தொகுசீர் இறைவன் உறை பட்டிசரம் ஏத்தி எழுவார்கள் வினையேதும் இலவாய் நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாதவ அவரே பாடல் 8: நேசமிகு தோள் வலவனாகி இறைவன் மலையை நீக்கி இடலும் நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் ஈசன் உறை பட்டிசரம் ஏத்தி எழுவார்கள் வினையேதும் இலவாய் நாசமற வேண்டுதலின் நண்ணல் எளிதாம் அமரர் விண்ணுலகமே பாடல் 9: தூய மலரானும் நெடியானும் அறியார் அவன தோற்ற நிலையின் ஏயவகை ஆனதனை யாரது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் பாய நலநீறது அணிவான் உமை தனோடும் உறை பட்டிசரமே மேய அவனது ஈரடியும் ஏத்த எளிதாகும் நலம் மேலுகமே பாடல் 10: தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடுபிண்டம் அது உண்டு உழல் தரும் கடுப்பொடி உடல் கவசர் கத்துமொழி காதல் செய்திடாது கமழ் சேர் மடிக் கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் படைக்கொரு கரத்தன் மிகு பட்டிசரம் ஏத்த வினை பற்று அறுதலே பாடல் 11: மந்தமலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறு அதனுள் பந்தம் உயர் வீடு நல பட்டிசரம் மேய படர் புன்சடையனை அந்தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணியார் செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்பவல தொண்டர் வினை நிற்பதிலவே