У нас вы можете посмотреть бесплатно திருக்கருக்குடி | வாரம் ஒரு தேவாரம் | போகிற வழிக்கு புண்ணியம் l திருமுறை 3-21 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருக்கருக்குடி | வாரம் ஒரு தேவாரம் | போகிற வழிக்கு புண்ணியம் l திருமுறை 3-21 Video contents: 00:00 Intro 00:31 தேவாரம் முன்னுரை 02:34 திருக்கருக்குடி தேவார முன்னுரை 03:17 1. நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி 03:50 2. வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர் 04:31 3. மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி 05:02 4. ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் 05:37 5. சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக் 06:08 6. இன்புடையார் இசை வீணை பூணரா 06:44 7. காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர் 07:20 8. எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை 07:50 9. பூமனும் திசைமுகன் தானும் பொற்பமர் 08:26 10. சாக்கியர் சமண் படு கையர் பொய்ம்மொழி 09:02 11. கானலில் விரைமலர் விம்மு காழியான் பதிக எண்: 3.21 திருக்கருக்குடி காந்தார பஞ்சமம் பாடல் 1: நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி நினைவிலும் எனக்கு வந்து எய்து நின்மலன் கனைகடல் வையகம் தொழு கருக்குடி அனலெரி ஆடும் எம் அடிகள் காண்மினே பாடல் 2: வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர் மூதெயில் எரி எழ முனிந்த முக்கணன் காதியல் குழையினன் கருக்குடி அமர் ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே பாடல் 3: மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி நஞ்சுறு திருமிடறு உடைய நாதனார் அஞ்சுரும்பு ஆர்குழல் அரிவை அஞ்சவே வெஞ்சுரம் தனில் விளையாடல் என் கொலோ பாடல் 4: ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் கானிடை ஆடலான் பயில் கருக்குடிக் கோனுயர் கோயிலை வணங்கி வைகலும் வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே பாடல் 5: சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக் கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி பாடுவார் இசை பறை கொட்ட நட்டிருள் ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே பாடல் 6: இன்புடையார் இசை வீணை பூணரா என்புடையார் எழில் மேனி மேலெரி முன்புடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே பாடல் 7: காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர் கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர் சீலமும் உடையவர் திருக்கருக்குடிச் சாலவும் இனிது அவருடைய தன்மையே பாடல் 8: எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார் கறைபடு பொழில் மதி தவழ் கருக்குடி அறிவொடு தொழும் அவர் ஆள்வர் நன்மையையே பாடல் 9: பூமனும் திசைமுகன் தானும் பொற்பமர் வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கெரி ஆமென உயர்ந்தவன் அணி கருக்குடி நா மனனினில் வர நினைதல் நன்மையையே பாடல் 10: சாக்கியர் சமண் படு கையர் பொய்ம்மொழி ஆக்கிய உரை கொளேல் அருந்திரு நமக்கு ஆக்கிய அரன் உறை அணி கருக்குடிப் பூக்கமழ் கோயிலே புடை பட்டு உய்ம்மினே பாடல் 11: கானலில் விரைமலர் விம்மு காழியான் வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி ஆன மெய்ஞான சம்பந்தன் சொல்லிய ஊனமில் மொழி வலார்க்கு உயரும் இன்பமே