У нас вы можете посмотреть бесплатно 07.001 திருவெண்ணெய்நல்லூர் | பித்தா பிறைசூடீ பெருமானே | சுந்தரர் தேவாரம் | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
07.001 திருவெண்ணெய்நல்லூர் | பித்தா பிறைசூடீ பெருமானே | சுந்தரர் தேவாரம் |#PanniruThirumurai #KripapureeswararTemple | #Thiruvennainallur | #Sundarar | #Thevaaram இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில் மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கிருபாபுரீசுவரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மங்களாம்பிகை திருமுறை : ஏழாம் திருமுறை 001 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிக குரலிசை : திரு தம்பையா ஓதுவார் இத்திருப்பதிகம், சிவபிரானை நோக்கி "அடியேன் உனக்கு முன்பே ஆளாகி இப்பொழுது நீ வந்து என்னை உனக்கு அடியான் என்று சொல்லியபொழுது அடியவன் அல்லேன்" என எதிர் வழக்குப் பேசியது தகுமோ என இரங்கி அருளிச்செய்தது. பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே. ..... (01) நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை பேயாய்த் திரிந்து எய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன் வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே. ..... (02) காரூர் புனல் எய்திக் கரை கல்லித் திரைக் கையால் பாரூர் புகழ் எய்தி திகழ் பன்மாமணி உந்தி சீரூர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் ஆரூரன் எம்பெருமாற்காள் அல்லேன் எனலாமே. ..... (10) பொருளுரை : மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் "அடியவனல்லேன்" என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ. ஆலய முகவரி : அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில், திருவெண்ணைநல்லூர் அஞ்சல், திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம், PIN - 607203. எப்படிப் போவது : மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"