У нас вы можете посмотреть бесплатно இலங்கை வானொலி தென்றலில் " தேனமுது! " .தொகுத்தளிப்பது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இலங்கை வானொலி தென்றலில் ஞாயிறு மாலை, நேயர்களின் மனங்கவர் " தேனமுது! ********************************************** வாரம் ஓர்தடவை இலங்கை வானொலி தென்றலில் ஞாயிறு மாலை ஆறு முப்பதிலிருந்து 7 மணி வரை ஒலிக்கும் அரை மணி நேர ,நேயர்களின் அபிமானம் வென்ற ஓர் ஜனரஞ்சக நிகழ்ச்சிதான் " தேனமுது!". கடந்த 12/09/2021 அன்று எனது பிரதியும் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. உண்மையில் இந்நிகழ்ச்சியைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்தேன். எனது பிரதியை சேர்த்துக்கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றலுக்கும் நிகழ்ச்சியில் பிரதியை மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாசித்து,நிகழ்ச்சியை மிகவும் செளுமையுடன் அருமையாகத் தொகுத்தளித்தே என்னை ஆனந்தத்தில் ஆழ்த்திய அன்புச் சகோதரி சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்களுக்கும் முதற்கண் என் ஆழ்ந்த நன்றியும் நல் வாழ்த்துக்களும்! நமது இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர்களில் ஒருவரான அன்புச் சகோதரி திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்களின் சுறுசுறுப்பான விறுவிறுப்பான இனிமையான தொகுப்பில் இந்தத் "தேனமுது" நிகழ்ச்சி வாராவாரம் நேயர்களுக்கு விருந்து படைக்கின்றது . ஒலிக்கும் ஒவ்வொரு பாடலுக்கும் நேயர்களின், நான்கு வரிகளுக்கும் அல்லது ஆறு வரிகளுக்கு மேற்படாத சின்னச் சின்ன கவிதைகளுடன், அதிலும் அழகு வாய்ந்த வரிகள் நிறைந்த கவிதைகளுடன் சேர்ந்து ஒலிக்கும் ஒரு இனிய நிகழ்ச்சிதான் தேனமுது. ஒரு பாடல் ஒலிக்க முன்னர் அப்பாடலின் ஓர் சில சிறந்த வரிகளை ஒலிபரப்பி, அதன்பின்பு நேயர் தெரிவுசெய்த பாடலுக்கான கவிதையை வாசித்து,தொடர்ந்து பாடலை முழுமையாக ஒலிபரப்பும் அவரது பாணி உண்மையாகவே நேயர்களை மிகவும் கவர்ந்தது. எமது இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள், பெரும் இலக்கியவாதியும் இலக்கிய ஆர்வலருமென்றால் அது மிகையல்ல.ஆம், நமது இலங்கை வானொலியில் அனேகமான இலக்கிய நிகழ்ச்சிகளில் இவரது பங்களிப்போ அனைவராலும் போற்றத்தக்க விதத்தில் செயலில் மிகவும் அதிகமாகும். அனேகமான பாடல்களை வானொலிக்கு யாத்து வழங்கியுள்ளார் சகோதரி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள். மதங்கள், மற்றும் அரசியல் , விஷேட நிகழ்வுகள், தத்துவம், காதல், சோகம், சமூகப் பண்பாடுகள், சமூக ஒருமைப்பாடு, நாட்டின் மேம்பாடு, தொழில் துறைகள் , பக்திப் பாடல்களெனப் பல்வேறுபட்ட அம்சங்களை மையப் பொருளாகக் கொண்டு சகோதரி ,பல நூற்றுக்கணக்கான பாடல்களை அன்னை வானொலிக்கென யாத்து வழங்கியுள்ளமை அனைவருமே வியந்து போற்றும் பெருமைக்குரிய விடையமாகும். இலங்கை வானொலி தென்றல் , வர்த்தக சேவை, தேசிய சேவை போன்ற நமது சேவைகளில் பல்வேறுபட்ட இலக்கிய, மற்றும் அறிவுபூர்வ நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்து, அவற்றிற்கான அறிவிப்புப் பணிகளையும் மிகவும் இனிமையோடு சுறு சுறுப்பாக, ,எப்போதுமே மலர்ந்த முத்தோடு, சிறப்பாகச் செவ்வனே செய்து வரும் சகோதரியின் உயர் பணிகள் சேவைகளோ மிகவும்பாராட்டிற்குரியதாகும். அன்புச் சகோதரி , எங்கள் அபிமான அறிவிப்பார் சகோதரி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்களின் மெச்சத்தக்க மேன்மை மிகும்பணிகள் மென்மேலும் வளர்ந்தோங்கவும், சகோதரி என்றென்றும் நலமோடு வளமோடு மகிழ்ச்சியுடன் நீடு வாழவும் , மனமார வாழ்த்தி, இலக்கிய உலகம் மற்றும் இலங்கை வானொலி சார்பாக நன்றிகள் கூறுவதோடு, எனது "தேனமுது" நிகழ்ச்சிப் பிரதியைச் சேர்த்துக்கொண்டு ஒலிபரப்பி என்னை மகிழ்வித்த சகோதரிக்கும் நமது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும்,எங்கள் அபிமானத் தென்றலுக்கும் எனது ஆழ்ந்த நன்றிகளையும் நல்வாழ்த்துக்களையும் மன நிறைவுடன் சமர்ப்பணம் செய்கின்றேன்! நன்றி நல்வாழ்த்துக்கள்!! என்றும் அன்பு அபிமான நேயர் """""""""""""""""""""""""""""""""""""""""""""""""" எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர்- இலங்கை (கி.மா) 0777161224-0754551230. (18/9/2021) """""""""""""""""""""