У нас вы можете посмотреть бесплатно மனிதமும் அல்ல!!மிருகமும் அல்ல!!உன்னவன்!! (முழுநாவல்)| Tamilaudionovels | niviammunovels | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மனிதனும் அல்ல!! மிருகமும் அல்ல!! உன்னவன்!! (வேம்பையர்) நாயகன் - இந்திரன் நாயகி - இதழினி (இக்கதை முழுக்க முழுக்க என்னுடைய கற்பனை. இடம், பெயர் இக்கதையில் குறிப்பிடும் அனைத்துமே கற்பனை மட்டுமே.) அசாம் காட்டு பகுதி... “தேன் சீக்கிரம் வா இவளை உருட்டி விடனும். யாராவது பார்த்துட போறாங்க…” ஒருவனின் குரல் அச்சத்தோடு ஒலித்தது. “ஆமா ஆமா சீக்கிரம் இவளை தள்ளி விட்டுட்டு நம்ப கிளம்பனும். இல்லைன்னா மாட்டிப்போம்…” என ஒரு பெண் பதட்டமாக கூறினாள். காருக்குள் இருந்து பால் வண்ண நிறத்தில், மஞ்சள் வண்ண சுடிதாரில், குழந்தை முகம் கொண்டவளை பிணமாக தூக்கினர். “இவளை கொலை செய்ய அசாம் வரைக்கும் வர வேண்டியதா இருக்கு என்ன பண்ண” என புலம்பிய படி இறந்து போன இதழினியை பள்ளத்துக்குள் தள்ளி விட்டனர். அது மிகவும் அடர்வான காட்டு பகுதி. அதிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி வேறு. அதனால், இவர்களுக்கு மிகவும் வசதியாக போனது இதழினியை கொன்று மலையில் வீச. இதழினி பெயருக்கு தகுந்தாற் போல் இதமானவள், அழகும். அழகு என்றால் சாதாரணம் அல்ல மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகு. பேரழகி. 22 வயது இளம் மங்கை. பயந்த சுபாவம், யாரையும் எதிர்த்து பேச தெரியாதவள், அனைவரையும் எளிதில் நம்ப கூடியவள். அவளை அழு மூஞ்சி என்று தோழிகள் கிண்டல் செய்ய கூடியவர்கள். பிறந்ததும் தன் தாயை இழந்ததால் என்னவோ இவள் இப்படி வளர்ந்து விட்டாள். இதழ்,தந்தையின் உயிர், அவரின் செல்ல பிள்ளை. அவளின் உருவம் தென்படுகிறதா என பள்ளத்தை குனிந்து பார்த்தனர். பள்ளம் இருளில் பயங்கரமாக இருக்கவும் பயத்தில் பின் வாங்கியவர்கள், “இனி இங்க நிக்க வேண்டாம் டா.. திவினேஷ் வா ஓடிடுவோம்…” “இவளை கொலை பண்ண இவ்வளவு தூரம் வந்து நம்ப செத்துட கூடாது.. என்ன நான் சொல்லுறது சரி தானே…?” என்றாள் அந்த பெண். “ஆமாம் தேனு உடனே கிளம்புவோம் வா” என இருவரும் அவசரம் அவசரமாக காரில் ஏறினர். தேனரசி இதழினி தோழி, திவினேஷ் இதழினி தம்பி இருவரும் சேர்ந்து தான் இந்தழினியை கொன்று பள்ளத்துக்குள் தூக்கி போட்டது. இவர்களின் கார் கிளம்பிய அடுத்த நொடி மரத்தில் இருந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த உருவம் கீழே குதித்தது. அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தாலும் அந்த உருவத்துக்கு ஒன்றும் ஆகவில்லை. சாதாரணமாக கண்கள் மின்ன எழுந்து நின்றது. இதழினி விழுந்த பள்ளத்தை எட்டி பார்த்துக் கொண்டே திரும்பி கொஞ்சம் கொஞ்சமாக கண்களை விட்டு மறையும் காரை பார்த்தது. அவர்கள் காரை கொண்டு வந்து நிறுத்தியதில் இருந்து நடந்த அனைத்தையும் பகலில் பார்ப்பது போல் கூறிய விழிகளால் பார்த்துக் கொண்டு இருந்தது அந்த உருவம். ஆனாலும் அமைதியாக இருந்தது. “அவள் உடலில் உயிர் இல்லை” என்பதை அவன் கூறிய விழிகள் உணர்ந்து கொண்டது. எதைப்பற்றியும் யோசிக்காமல் சட்டென்று அவ்வளவு ஆழமான பள்ளத்துக்குள் குதித்தது அந்த உருவம். திவினேஷ், தேன் இருவரும் முகம் முழுவதும் கட்டுக்கடங்கா சந்தோஷமும், பூரிப்புமாக தங்கள் சொந்த ஊருக்குள் அடி எடுத்து வைத்தனர்.. நீலகிரி இவர்களின் பூர்வீகம். நீலகிரியில் மிகப் பெரிய பணக்கார குடும்பம். “ரவீந்திரன்” என கூறினால் தெரியாத ஆட்கள் கிடையாது.. அவ்வளவு செல்வாக்கு உடையவர். நேரடி அரசியல் மட்டும் தான் அவர் செய்யவில்லை. ஆனால் அரசியல் வாதிகளை கூட தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். நீலகிரியில் மிகப் புகழ் பெற்ற புள்ளிகள் கை விட்டு எண்ண கூடிய சிலர் தான். அதில் ஒருவர் தான் ரவீந்தர். காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி குழந்தை பிறந்ததும் இறந்து விட மகளை தனியாக பராமரிக்க தெரியாமல் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொண்டார் மகளுக்காக. “பூர்ணிமா” ஒரே ஒரு நிபந்தனையுடன் திருமணம் செய்து கொண்டார் ரவீந்தரை. “தனக்கு கட்டாயம் குழந்தை வேண்டும்” என்ற நிபந்தனையுடன் தான்.இவர்கள் இருவருக்கும் பிறந்தவன் தான் “திவினேஷ்”. ரவீந்தருக்கு மகள் என்றால் உயிர்..அவளுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய கூடியவர்.. கொலை செய்ய சொன்னாலும் யோசிக்கவே மாட்டார். அப்படி பட்ட பாசம். பார்க்க மனைவி மாதிரி இருப்பதாலா இல்லை என்ன காரணமோ இதழினி மீது கொள்ளைப் பிரியம் வைத்திருக்கிறார். தொழில், தொழில் என தொழிலை சுற்றி ஓடியவருக்கு மிகப் பெரிய மனக்குறை மகளின் அப்பாவித்தனம், பயம், அழுகை. இருளை கண்டால் தேம்பி, தேம்பி அழுது விடுகிறாள். அவளை வளர்க்க தான் பூர்ணிமாவை திருமணம் செய்தது பூர்ணிமா நன்றாக தான் வளர்த்தாள். ஆனால் இதழின் குணம் மட்டும் மாற்றம் இல்லாமல் அப்படியே தாயை போலவே இருந்தது. மனைவியை ரசித்தவருக்கு மகளை நினைத்து பயம் தொற்றிக் கொண்டது. #lovestory #romantic #romanticlovestor #antihero #antiheronovel #tamilaudionovels #fullepisode #fullstory #love #niviammunovels #niviammu #audiobook #audionovel #audionovelbook #tamil