У нас вы можете посмотреть бесплатно நவக்கிரக தோஷங்கள் விலகும் பதிகம் | கோளறு பதிகம் | வேயுறு தோளிபங்கன் | தினமும் கேட்கும் பதிகம் | RGS или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#RGS_Global #RGS #நவக்கிரக_தோஷங்கள்_விலகும்_பதிகம் #கோளாறு_பதிகம் #வேயுறு_தோளிபங்கன் #தினமும்_கேட்கும்_பதிகம் #வினைதீர_வழிதரும்_திருமுறைகள் #திருஞானசம்பந்தர் #திருஞானசம்பந்தர்_தேவாரம் #திருவாசகம் #தேவாரம் #பெரியபுராணம் #Thiruvasagam #Thevaram கிரகதோஷங்கள் நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம். திருமறைக்காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்படும் சம்பந்தர் கோள்களின் பாதிப்பு நீங்கப் பாடிய கோளறு பதிகம். “சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞானசம்பந்தர். கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் நிகழும் போது இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை சொல்லலாம். ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் மகிழ்ந்து உறவாடி இருந்த திருத்தலங்களுள் ஒன்று திருமறைக்காடு. அக்காலத்தில் தென்பாண்டித் திருநாட்டில் புறச்சமயம் ஓங்கியிருந்தது. சுவாமிகள் திருமடம் அமைத்துத் தங்கியிருந்தபோது சிவ சமயத்தை மீட்டெடுக்க பாண்டிய நாட்டுக்கு எழுந்தருள வேண்டும். என பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி எனும் மாதரசி - ஞானசம்பந்தப் பெருமானுக்கு திருமுகம் அனுப்பியிருந்தாள். அதைக் கண்ட திருஞானசம்பந்தர் மதுரையம்பதிக்குப் புறப்படலானார். அப்போது, அப்பர் சுவாமிகள் - இவ்வேளையில் நாளும் கோளும் நல்லனவாக இல்லையே!.. - என, ஞானசம்பந்தரிடம் தனது கவலையைத் தெரிவித்தார். ஏனெனில் புறச்சமயத்தாரின் கொடுமைகளை அனுபவித்து மீண்டு வந்தவர் அப்பர் சுவாமிகள். மனம் வருந்திய அப்பர் சுவாமிகளுக்கு ஆறுதல் கூறி - திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருப்பதிகம் இது. #இறைவர்_திருப்பெயர் : #ஸ்ரீ_மறைக்காட்டு_மணாளன் #இறைவியார்_திருப்பெயர் : #ஸ்ரீ_யாழைப்பழித்த_மொழியாள் #திருமுறை : இரண்டாம்_திருமுறை_085வது_திருப்பதிகம் #அருளிச்செய்தவர் : #திருஞானசம்பந்த_சுவாமிகள் #பதிக_குரலிசை : #ஓதுவார்_கோவை_மருது_சிவகுமார் #பதிகப்_பலன் : தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம்பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன் முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை. #குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். Hope this video will be helpful✌ ⚡⚡Don't forget to share this video with ur frnds and family ⚡⚡ for more videos-- subscribe &like &share 💯 ♦️♦️♦️HAPPY LIFE♦️♦️♦️ Disclaimer This channel does not promote or encourage any illegal activities Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. Thank you!!! "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்".