У нас вы можете посмотреть бесплатно அகதியாக или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சுவிட்சர்லாந்து நாட்டு அரசியலும் ஈழத்தமிழர்களின் பங்களிப்பும்.......... ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் மிகவும் அழகானதும் அமைதியானதும் செல்வந்த நாடாகவும் விளங்கும் சுவிட்சர்லாந்து நாடு ஐரோப்பாவின் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதில் இருந்தே இந்த நாட்டின் பெருமைகளை அறியமுடியும். இந்த நாடு மிக சிறிய பரப்பளவை கொண்டதும் ; பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நான்கு பெரிய நாடு களை எல்லையாக கொண்டு நடுவில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பான நாடாகும். அழகிய மலைகள் ஆறுகள் நீரேரி கள் சோலைக் காடுகள் பழமை மாறாத கட்டடங்கள் என அனைத்தையும் தன்னகத்தே உள்ளடக்கி உலகில் அனைத்து நிலைகளிலும் உயர்ந்து நிற்கும் ஒர் சிறந்த நாடு. இங்கே உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அந்த நாடுகளின் அரசியல் பொருளாதார சூழ்நிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்படும் மக்கள் புலம் பெயர்ந்து வந்து ஓர் இயல்பான வாழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் சுமார் 140 நாடுகளுக்கு மேலான மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவ்வாறே இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாக ஈழத்தமிழ் மக்களும் புலம் பெயர்ந்து வந்து வாழ்கின்றனர்.1983 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்களால் நடாத்தப்பட்ட மாபெரும் இனவழிப்பு செயற்பாட்டால் ஏராளமான தமிழ் மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வந்தது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு சுவிட்சர்லாந்து நாட்டுக்கும் ஆரம்பத்தில் பல இளஞர்கள வந்து அரசியல் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் பின்னர் தங்கள் வாழ்வுத் துணைகளை இலங்கை யில் இருந்து அழைத்து வாழ்வை மேம்படுத்திக் கொண்டார் கள். இவ்வாறு ஏற்பட்ட தமிழ்க் குடிப்பரம்பல் இன்று சுமார் அறுபதினாயிரம் பேரைக் கொண்டதாகவும் இந்த நாட்டின் அரசியல் பொருளாதார நிலைகளில் ஒர் பங்களிப்பு செய்யும் நிலையிலும் இருப்பது தமிழர்கள் ஆகிய எமக்கு பெருமையே. அவ்வாறு இலங்கைக்கும் குறிப்பாக எமது தமிழ் இனத்துக்கும் பேரும் புகழும் ஏற்படுத்தி தந்துள்ள ஒருவர் பற்றிய ஓர் மகிழ்வான செய்தியை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் 1988 ம் ஆண்டு இந்திய இலங்கை இராணுவ த்தின் இன அழிப்பு கால கட்டத்தில் இலங்கை யில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர் தான் துரைராசா ஜெயக்குமார் அவர்கள். அவர் இன்று சுவிட்சர்லாந்து நாட்டின் அரசியலில் ஒரு முக்கிய பதவியில் அமர்ந்து அனைத்து இன மக்களுக்கும் சேவை ஆற்ற உள்ளார் என்பதே மாபெரும் சாதனை ஆகும். உலகிலேயே சுவிட்சர்லாந்து நாட்டு அரசியல் என்பது மிகவும் சிறந்த கொள்கை களை கொண்ட ஓர் அரசியல் அமைப்பாகும். சுவிட்சர்லாந்து ஒரு நேரடி ஜனநாயக அரசியல் அமைப்பை யாப்பில் மட்டுமன்றி நடைமுறையிலும் கொண்டுள்ளது என்பதை பறைசாற்றி நிற்கிறது. பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் எந்த விதமான ஏற்றத் தாழ்வு களோ பாகுபாடு களோ ஏதுமின்றி அனைவரும் சமம் என்ற கொள்கை அரசியல் அமைப்பைக் கொண்ட ஓர் சிறந்த சமஸ்டி முறை மக்களுக்கானஆட்சியாகும். இந்த நாடு 26 மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இங்குள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி ஒவ்வொரு மாகாணமும் தனக்கான தனித்தனி சுய அதிகாரங்கள் கொண்டுள்ளது மிக சிறப்பாகும். சொல்லப் போனால் ஒவ்வொரு மாகாணமும் ஒரு நாடு போல் அதிகாரம் கொண்டது சிறப்பம்சமாகும். அவ்வாறான 26 மாகாணங்களில் ஒன்றான" செங்காளன்" எனப்படும் மாகாணத்தில் வந்து குடியேறியவர்தான் திரு துரைராசா ஜெயக்குமார் அவர்கள். இவ்வாறு 1988 ம் ஆண்டு அரசியல் தஞ்சம் கோரி இங்கு குடியேறிய திரு ஜெயக்குமார் அவர்கள் இன்று 2026 ஆறில் இந்த மாகாணத்தின் நகரசபை புதிய முதல் வராக பதவி ஏற்பது என்பது சாதாரண விடயம் அல்ல. இந்த செங்காளன் மாகாணம் சுவிட்சர்லாந்து நாட்டின் கிழக்கு பகுதியில் தலைநகராக விளங்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துமான அழகிய நகரமாகும். இங்கு ஏறத்தாழ 30 வீதமான வெளிநாட்டவர்கள் வாழ்கிறார்கள்.இப் பகுதி மக்கள் பழமை பூர்வீகம் மற்றும் தேசியத்தை பெரிதும் பேணிக் காக்கும் பண்புள்ளவர்களாக வாழ்கின்றனர். இங்கு இப்படியான ஓர் முக்கிய பதவியை ஒரு வேற்று நாட்டவர் நிறத்தாலும மதத்தாலும் மொழியாலும் வேறுபட்டு அகதியாக புகலிடம் தேடி வந்த ஒருவர் பெறுவது இதுவே முதற் தடவையாகும். இந்த மாற்றமானது சுவிஸ் ஒரு மனிதாபிமானமிக்க நேரடி ஜனநாயக அமைப்பைத் கொண்ட சிறந்த நாடு என்பதற்கு உலகிற்கு உதாரணமாக விளங்குகிறது என்பதில் மிகையில்லை.இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக 2004. - 2005 காலப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட சமாதான பேச்சுவார்த்தை யின் போது தமிழர் தரப்பில் மிகவும் விருப்பத்துடன் பார்க்கப் பட்ட மிக சிறந்த அரசியல் அமைப்பாகவும் இது இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறந்த அரசியல் அமைப்பைக் கொண்ட இந்த நாட்டின் ஒரு நகரசபை இவ் வாண்டு பொறுப்பேற்க இருப்பவர் தான் திரு துரைராசா ஜெயக்குமார் அவர்கள். யார் இந்த ஜெயக்குமார் எவ்வாறு இந்த உயரத்தை தொட்டார் என்பதை கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வேண்டிய பொறுப்பும் தேவை யும் ஈழத் தமிழர்கள் ஆகிய எமக்கு அவசியமாகும்.ஏனெனில் இவரது இந்த உயர் நிலை எமது எதிர்கால சந்ததிக்கு ஓர் முன்னுதாரணமும் வாழ்வியல் அர்த்தத்தையும் கொடுக்கும் ஓர் வழிகாட்டி ஆகும். இவர் தமிழீழ தேசத்தின் மிக சிறந்த பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட சிறந்த மாவட்டமான யாழ்ப்பாணம் கோண்டாவில் எனும் சைவத் தமிழ் பண்பாட்டு புகழ் பெற்ற ஊரில் துரைராசா தையல் நாயகி தம்பதிகளுக்கு நான்காவது பிள்ளையாக பிறந்தார் இவருக்கு இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் கூடிப் பிறந்த உறவுகளாக உள்ளார்கள். இவர் தனது ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இராம கிருஷ்ணா மகாவித்தியாலயத்தில் கற்று பின்னர் தனது உயர் கல்வியை உரும்பிராய் இந்துக் கல்லூரி யில் கற்றுத் தேர்ந்தார். இவர் தனது இளமைக் காலத்தில் எல்லோரும் போல் சிங்கள அரசாலும் இராணுவத்தாலும் நடாத்தப்பட்ட அடக்கு முறைகளினால் பாதிக்கப்பட்டார். nalavalvu.ch