У нас вы можете посмотреть бесплатно Karthar Nallavar | கர்த்தர் நாம் கேட்கும் அரிதான காரியங்களையும் செய்துதர முடியும் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அரிதான காரியத்தைக் கேட்டாய், உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும், இல்லாவிட்டால் கிடையாது என்றான். 2 இராஜாக்கள் 2:10 கர்த்தருடைய ஆவியை பெறுவதற்கும், கர்த்தருடைய அபிஷேகத்தை பெறுவதற்கும், கர்த்தருடைய ஆசீர்வாதத்தை பெறுவதற்கும், கர்த்தர் விரும்புகிற அவர் சொல்கிற காரியத்தை நாம் செய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலும் பிறருக்கு ஒன்று செய்தால் தான் நமக்கு ஒன்று கிடைக்கிறது. கர்த்தருடைய ஆவியையும் அபிஷேகத்தையும் பெற வேண்டுமானால் அவருடைய சமூகத்துக்கு முன்பாக நம்மை தாழ்த்தி முழு இருதயத்தோடு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கர்த்தருடைய ஆவியும் அவருடைய அபிஷேகமும் நம்மேல் பொழியும். உபாகமம் 28-ம் அதிகாரத்தை படித்து பார்க்கும் போது, இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின் படியெல்லாம் செய்ய நீ கவனமாய் இருக்கும்படிக்கு அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவி கொடுப்பாயானால் உன் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார் என்றும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு செவி கொடுக்கும் போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்கள் எல்லாம் உன் மேல் வந்து உனக்கு பலிக்கும் என்றும் கர்த்தர் மோசே மூலமாக ஜனங்களுக்கு சொல்கிறார். ஒன்றைப் பெற வேண்டுமானால் ஒன்றைச் செய்ய வேண்டும். எந்த ஒரு மனிதனும் மற்றொரு மனிதனுக்கு உதவியோ நன்மையோ எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதில்லை. ஒன்று அவன் உதவி கேட்க வேண்டும் அல்லது அன்போ பொருளோ கொடுக்கவேண்டும். அதாவது அன்புக்காகவோ நட்புக்காகவோ அல்லது பணத்துக்காகவோ உதவி செய்யலாம். மேலும் இரக்கத்தோடு மனிதாபிமானத்தோடு செய்யலாம். அந்த இரக்கமும் தயமும் மனிதாபிமானமும் அவர்களுடைய இருதயத்திற்கு கர்த்தர் தான் கொடுக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் என்று தான் சொல்கிறார். கேட்டால் தான் கிடைக்கும் ஆனால் கிடைக்கச் செய்கிறவரும் கர்த்தர் தான். இங்கு எலிசா எலியாவிடம் உம்மிடத்தில் உள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய் கிடைக்கும் படி வேண்டுகிறேன் என்றார். அதற்கு எலியா அரிதான காரியத்தைக் கேட்டாய், உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும், இல்லாவிட்டால் கிடையாது என்றான். அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது, எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான், அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானுக்கு போனான். கர்த்தருக்கு பிரியமானவர்களே இந்த காரியத்தில் நான் விசுவாசிப்பது என்னவென்றால், எலிசா கேட்டதை கொடுத்ததற்கு கர்த்தரே காரணம். ஏன்என்றால் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே அக்கினி ரதமும் அக்கினி குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து அவர்களை பிரித்தது. அக்கினியில் இரண்டு பேரும் வெந்து போகவும் இல்லை இரண்டு பேருடைய ஆடையும் கருகிப் போகவும் இல்லை. மற்றொன்று மேலே எடுத்துக் கொண்டு போகிற சுழல் காற்று எலியாவை மட்டுமே எடுத்துக் கொண்டுபோனது, சால்வையையோ கீழே போட்டது. கர்த்தருக்கு பிரியமானவர்களே கர்த்தர் நம்மோடு இருக்கும் போது அவருடைய சத்தத்திற்கு நாம் கவனமாய் செவி கொடுக்கும் போது அவருடைய நாமத்தினாலே நாம் எப்பேர்பட்ட அரிதான காரியங்களை நாம் கேட்கும் போதும், அவருடைய நாமத்தினாலே நாம் பிறரிடத்தில் கேட்கும் போது கூட அவர்கள் அறியாமலே கர்த்தர் அவர்கள் இருதயத்தில் பேசி, அவர்கள் கண்களிலும் இருதயத்திலும் தயவு கிடைக்கசெய்து, நாம் கேட்ட அரிதான காரியங்களையும் நமக்கு செய்து கொடுக்க நம் தேவனாகிய சர்வ வல்லமை உள்ள தேவனாகிய கர்த்தரால் முடியும். எனவே கர்த்தரால் அழைக்கப்பட்ட அவருடைய நாமத்தை தொழுது கொள்கிற அவருடைய அபிஷேகத்தை பெற்ற அவருடைய பிள்ளைகளாகிய நாம் அவர் சத்தத்திற்கு கவனமாய் கீழ்ப்படிந்து அவரிடத்தில் கேட்கிற அரிதான காரியங்களையும் அவர் நமக்கு செய்து கொடுப்பார் என்ற விசுவாசத்தோடு வாழ்ந்து, நாம் எதிர்பார்க்கிற விரும்புகிற வேண்டுகிற காரியங்களை அவருடைய சித்தத்தினாலே கேட்டு பெற்றுக் கொள்வோம் ஆமென். #Kartharnallavar #God is Good #KARTHARNALLAVAR #கர்த்தர்நல்லவர் #Morningdevotion #TamilMessage #Shortmessage #GoodMorning #PraisetheLord #Gospel #Gospelmessage #Hope #Word #Godsword #TodayMessage #TodayWord #Bibleword #Hopeword #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood. #Kartharnallavar #TamilMessage #Morningdevotion #Praise# the Lord #Gospel #Gospelmessage #Hope #Word #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood #Prophetic word, #Prophetic voice #இறைவார்த்தை #இன்றைய வார்த்தை #இன்றையமன்னா #கர்த்தர்நல்லவர் #Goodword #kartharnallavar #gospel #hope #morningdevotion #tamilmessage #word #godisgood #prophetic #successway