У нас вы можете посмотреть бесплатно திருச்சிவபுரம் - இன்குரல் இசைகெழும் யாழ்முரல - திருஞானசம்பந்தர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
01.112 திருச்சிவபுரம் | இன்குரல் இசைகெழும் யாழ்முரல | திருஞானசம்பந்தர் தேவாரம் | #ThiruneriyaThamizhosai #SivagurunathaswamyTemple | #ThiruSivapuram | #Thirugnanasambandhar | #Thevaaram "சிவபுரம்" என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும். திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்து பேறு பெற்ற தலம். இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் "பாரவன் காண்" என்று தொடங்கும் பாடலில் "பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன் காண்" என்று பாடியுள்ளார். இத்தலத்தில் பூமிக்கடியில் ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். ஆகையால் இத்தலத்தைக் காலால் மிதிப்பதற்கு அஞ்சி திருஞானசம்பந்தர் அங்கப் பிரதட்சினம் செய்து இறைவனை வழிபட்டார். பின்பு ஊர் எல்லையைத் தாண்டிச் சென்று அங்கிருந்தபடி இத்தல இறைவனை பதிகம் பாடி வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. சிவாலயங்களில் அங்கப் பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும் இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சிவபுர நாதர், ஸ்ரீ பிரம்மபுரி நாதர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிங்கார வல்லி, ஸ்ரீ ஆர்யாம்பாள் திருமுறை : முதலாம் திருமுறை 112 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் திருநறையூர்ச் சித்தீச்சரம் முதலிய தலங்களை வணங்கிப் பதிகப்பணி செய்த , திருஅரிசிற்கரைப்புத்தூரில் இருக்கின்ற காலத்து, திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருச்சிவபுரத்திற்கு எழுந்தருளினார்கள். இத்தலம் திருமால் வெள்ளைப் பன்றியாய்ச் சிவபெருமானை வழிபட்ட தலமாதலின் அங்கே எழுந்தருளியிருக்கின்ற இறைவன் திருவடியை வணங்கிப் "புவம் வளி கனல் புனல்" என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார். 00:12 இன்குரல் இசைகெழும் யாழ்முரலத் தன்கரம் மருவிய சதுரன் நகர் பொன்கரை பொருபழங் காவிரியின் தென்கரை மருவிய சிவபுரமே. ..... (01) 02:42 அன்று அடற்காலனைப் பாலனுக்காய்ப் பொன்றிட உதை செய்த புனிதன் நகர் வென்றிகொள் எயிற்று வெண்பன்றி முன்னாள் சென்று அடி வீழ்தரு சிவபுரமே. ..... (02) 03:51 மலைமகள் மறுகிட மதகரியைக் கொலை மல்க உரிசெய்த குழகன் நகர் அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே சிலை மல்கு மதில் அணி சிவபுரமே. ..... (03) 04:17 மண் புனல் அனலொடு மாருதமும் விண் புனை மருவிய விகிர்தன் நகர் பண் புனை குரல்வழி வண்டுகிண்டிச் செண்பகம் அலர் பொழில் சிவபுரமே. ..... (04) 05:20 வீறு நன்கு உடையவள் மேனி பாகம் கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான் நாறு நன் குரவிரி வண்டுகிண்டித் தேறல் உண்டு எழுதரு சிவபுரமே. ..... (05) 06:12 மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து நீறது ஆக்கிய நிமலன் நகர் நாறுடை நடுபவர் உழவரொடும் சேறுடை வயலணி சிவபுரமே. ..... (06) 07:14 ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு மேவி நன்கு இருந்ததொர் வியன நகர்தான் பூவில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச் சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே. ..... (07) 07:59 எழில் மலை எடுத்த வல் இராவணன் தன் முழுவலி அடக்கிய முதல்வன் நகர் விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே. ..... (08) 08:46 சங்கு அளவிய கையன் சதுர்முகனும் அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான் கங்குலும் பறவைகள் கமுகுதொறும் செங்கனி நுகர்தரு சிவபுரமே. ..... (09) 09:29 மண்டையின் குண்டிகை மாசு தரும் மிண்டரை விலக்கிய விமலன் நகர் பண்டமர் தருபழங் காவிரியின் தெண்திரை பொருது எழு சிவபுரமே. ..... (10) 10:30 சிவனுறை தரு சிவபுர நகரைக் கவுணியர் குலபதி காழியர்கோன் தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் நவமொடு சிவகதி நண்ணுவரே. ..... (11) பதிகப் பலன் : சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரநகரைப் போற்றிக் கவுணியர் குலபதியாகிய காழியர் தலைவன் ஞானசம்பந்தன் பாடிய தவத்தைத் தருவனவாகிய இப்பதிகத் தமிழை ஓதவல்லவர் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதிசேர்வர். ஆலய முகவரி : அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம், சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 612 401. எப்படிப் போவது : கும்பகோணம் - திருவாரூர் சாலையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் சுமார் 3 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மி. தூரத்தில் உள்ளது. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"