У нас вы можете посмотреть бесплатно ANBIN MOZHI # ( Official)# Siluvaipathai Padal # அன்பின் மொழி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Lyrics , Music : S.Martin prakash 9486472372 Singer L.V. Brabhu Prayer Rev.Fr.J. Maria Anto Halvin Chorus Belgin Festus Felix Stephen Jisil Raja Melphin Felix Cynthia Alfrin Barbea Violin Suraj Bass Guitar Beno Violin Recorded by Sunish@Besnsun Studio, Tvm. Vocals Recorded by Justin@Geetham Recording Studio, Ngl. Keyboard Programming & Mixing by M. Jeba Raja @ Raja Music Works, Vky. Lyrical Video Studio B9 Music Composing L.V Brabhu., S.Martin Prakash Lyrics & Direction S. Martin Prakash Produced by S.Martin Prakash @ BRIO Creations சிலுவை பாதை பாடல் : பல்லவி :: கல்வாரி பாதையில் கல்லும் முள்ளும் கண் மூடி தூங்கியதே உன் மேனி தவழ்ந்த நிலமும் மரமும் புனிதம் அடைந்ததுவே மனிதனை மீட்க உயிரை நீத்த மாபரன் இவர் யாரோ இறைமகன் இவர்தானே இன்னுயிர் தந்தாரே இறைமகன் உமக்கே இந்நிலை என்றால் என் நிலை என்னாகும் என் நிலை மாற்ற இந்நிலை ஏற்றாய் என்பது மெய்யாகும் என்பது மெய்யாகும் (1) அநீத தீர்ப்பு உலகில் எங்கும் பரவி கிடக்கின்றதே இறைமகன் இயேசுவும் விதி விலக்கில்லை தீர்ப்புக்குள்ளானாரே மனுவுருவெடுத்த மாசறுபொன் இன்று கள்வர்கள் கைகளிலே பலியிடத் துடிக்கும் கொடியவர் நடுவில் செம்மறி தனி மரமே... இறைமகன் உமக்கே இந்நிலை என்றால் என் நிலை என்னாகும் என் நிலை மாற்ற இந்நிலை ஏற்றாய் (என்பது மெய்யாகும்) -2 (2) முள்முடி தரித்த மன்னவன் உனது பயணம் தொடங்கியதோ முறையற்ற தீர்ப்பில் மனம் தளராமல் சிலுவையை ஏற்றீரே வேடர்கள் நடுவில் மானின் நிலையில் தவிக்கும் வேளையிலே வேடிக்கை காணும் மனிதர்களாலே வேறெதும் பலனில்லையே இறைமகன் உமக்கே....... (3) சிலுவையின் பாரம் அழுத்திடும் நேரம் கால்களும் தடுமாறும் வலுவினை இழந்து நிலமதன் மீது விழுந்தது வானமுதம் புதுமைகள் புரிந்த புண்ணிய பூவிங்கே புழுதியில் புரள்கின்றதே புதைகின்ற விதைகள் பூமியை பிளந்து புலர்ந்தெழும் வேழையிதே.. இறைமகன் உமக்கே.... (4) குருதியில் குளித்த இறைமகன் இயேசு மரியின் எதிரினிலே உணர்வுகள் இடையில் வார்த்தைகள் ஏது மௌனம் ஆறுதலே கருவறை சுமந்த கண்மணியின் கல்லறை பயணமிது கண்களிரண்டில் கூரிய ஆணிகள் யாரதை அகற்றுவது இறைமகன் உமக்கே.... (5) தோள் கொடுக்க ஒரு தோழனின் வரவு தோள்களுக்காறுதலே காலத்தினால் செய்த சிறு உதவி இது ஞாலத்தில் மிக பெரிதே தொலைந்து போன மனித நேயம் துளிர்க்கும் தருணமிது தொலை தூர பயணம் துணை தேடும் தருணம் யார் உம்மை தேற்றுவது... இறைமகன் உமக்கே.... (6) வீரமும் ஈரமும் நிறைந்த வெரோணிக்கா பெண்மையின் புது உருவம் கறைபட்ட முகத்தை துடைத்ததனாலே கிடைத்தது அருள் வதனம் கறைபட்ட மனிதரை கழுவிடத்தானே பொழிந்தது செந்நீர் மழை பாதங்கள் கழுவிய பணிவிடைக்காகவா இறுதியில் இந்த நிலை இறைமகன் உமக்கே..... (7) இரண்டாம் முறையாய் நிலை தடுமாறி நிலமதில் விழுந்தீரே விழுவது எல்லாம் எழுவதற்காக மீண்டும் எழுந்தீரே நெடிய இப்பயணத்தில் கொடிய இவ் வேதனை எல்லாம் எதற்காக முள்முடி, கசையடி, வசைமொழி, உயிர்வலி எல்லாம் எனக்காக... இறைமகன் உமக்கே... (8) அழுதிடும் எருசலேம் மகளிருக்காக ஆறுதல் சொன்னவரே மரணத்தின் கோர பயணத்தின் போதும் ஆறுதலாய் நீரே உனக்காகத்தான் இந்த சிலுவை பயணம் - நீ எனக்காக வருந்தாதே பிறர் நலன் எண்ணியே வாழ்ந்திடும் ஜீவனோ போனாலும் திகையாதே இறைமகன் உமக்கே..... (9) கண்களும் மயங்கி உடலெல்லாம் நடுங்கி பலமெல்லாம் இழந்தீரே - என் பாவச்சுமையின் பாரம் தாங்காது தடுமாறி விழுந்தீரே பலி பீடம் தன்னில் பாவிகள் முன்னில் பலியாக துணிந்தீரே - என் பாவத்தின் பரிசை ஏற்றிடத்தானே மீண்டும் எழுந்தீரே... இறைமகன் உமக்கே.... (10) மானம் காக்கும் ஆடையை அகற்றி அவமான படுத்தினரே கிழிந்த சதையும் குருதியுமே இங்கு ஆடையாய் ஆனதுவே வலுவும் இழந்து உருவம் இழந்து வெறுமையாய் நின்றீரே கடவுளின் திருவுளம் நிறைவேறிடத்தானே மரணிக்க துணிந்தீரே இறைமகன் உமக்கே..... (11) கைகளும் கால்களும் கூரிய ஆணியால் சிலுவையில் அறைந்தனரே மன்னவன் இயேசு மரணத்தின் வாயிலில் சிதைந்தழுதாரே எம்மீது நீர் கொண்ட பேரன்பின் ஆழம் இதுவென்று உணரச்செய்தீர் நண்பருக்காக இன்னுயிரையும் ஈயும் - உயர் பண்பினில் உருகச் செய்தீர் இறைமகன் உமக்கே..... (12) சிதைந்திட்ட உடலும் தளர்ந்திட்ட மனமும் ஓய்ந்திடும் நேரமிது மனுவுருவெடுத்த இறைமகன் இயேசு விடை பெறும் தருணமிது தந்தையின் கையில் ஆவியை ஒப்படைத்து இன்னுயிர் துறந்தாரே தன்னையே கரைத்து ஒளி தந்த மெழுகு ஐயோ அணைந்திட்டதே... இறைமகன் உமக்கே.... ( 13) உயிரற்ற உடலாய் தூயவன் இயேசு தாயின் மடியினிலே இதயத்தில் வாள் ஒன்று ஊடுருவும் நேரம் உள்ளம் சிதறியதே இறைவாக்கினர் அன்று உரைத்தது போலே எல்லாம் நிகழ்ந்ததுவே அருள் நிறை மரியே ஆண்டவர் தாயே - எம் தாயுமாய் ஆனீரே... இறைமகன் உமக்கே.... (14) அடக்கம் செய்ய ஓர் இடம் கூட இல்லை கடவுளின் மைந்தனுக்கு மாடடை குடிலில் பிறந்தவன் இறுதியில் மாற்றான் கல்லறையில் மனிதம் காத்திட வந்த இம் மன்னா மறைந்து போனதெங்கே கோதுமை மணிகள் முழைத்திடத்தானே மண்ணுக்குள் மடிந்ததிங்கே,.. இறைமகன் உமக்கே....