У нас вы можете посмотреть бесплатно PANCHA GARUDA SEVAI-2025 - HOSUR - THAMBRAAS HOSUR или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஓசூரில் லோக க்ஷேமத்திற்காக "தமிழ்நாடு பிராமணர் சங்கம்" மற்றும் "ஓசூர் ஸ்ரீ வைஷ்ணவ கைங்கர்ய சபா" ஒருங்கிணைந்து நடத்திய பஞ்ச கருட சேவை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள சிஷ்யா பள்ளியில் 5 கோயில்களிலிருந்து பெருமாள் கருட வாகனங்களில் வந்திருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். லோக க்ஷேமத்திற்காகவும் , சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டியும், நல்ல மழை பொழிந்து மக்கள் யாவரும் சுபிட்சமாக வாழ வேண்டியும், நடைபெற்ற பஞ்ச கருட சேவை "தமிழ்நாடு பிராமணர் சங்கம்" மற்றும் "ஓசூர் ஸ்ரீ வைஷ்ணவ கைங்கர்ய சபா" அமைப்புகள் இணைந்து இரண்டாவது ஆண்டாக கருட சேவை நிகழ்ச்சி சிறப்பாக நடத்தினர். கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், ஓசூர் சிஷ்யா பள்ளியில் பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஓசூர் நேதாஜி ரோட்டிலுள்ள ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, பத்தகோட்டவில் உள்ள ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் ஸ்வாமி, ஓசூர் எரித்தெருவில் உள்ள ஸ்ரீ ருசிக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால ஸ்வாமி, ஓசூர் அகரம் ஸ்ரீ சுயம்பு அபயஹஸ்த லட்சுமி ந்ருசிம்ம ஸ்வாமி, ஓசூர் மோர்னப்பள்ளி ஸ்ரீ அபயஹஸ்த நரசிம்மர் ஸ்வாமி உள்ளிட்ட 5 கோயில்களின் உற்சவ பெருமாள்கள் பூர்ண கும்ப மரியாதை யுடன் கோலாட்டத்துடன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தனர். கருடவாகனத்தில் வீற்றிருந்த பெருமாள் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு மங்களா சாசனம், சாத்துமறை, வேதபாராயணம் மற்றும் ஏராளமான பக்தர்கள் மகா சங்கல்பங்கள் செய்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற அர்ச்சனைகளை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9 முதல் பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசித்து சென்றனர். இந்த வைபவத்தில் பரதநாட்யம், கர்நாடக சங்கீதம், நமசங்கீர்த்தனைகள், கோலாட்டம் ஆகிய நடைபெற்றது. 5 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர, ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.