У нас вы можете посмотреть бесплатно திருக்கோளிலி(திருக்குவளை) | நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் | சுந்தரர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
07.020 திருக்கோளிலி(திருக்குவளை) | நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் | சுந்தரர் தேவாரம் | கரூர் சுவாமிநாதன் | @ShaivamumThamizhum திருக்கோளிலி தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கோளிலி நாதர், ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வண்டமர் பூங்குழலி சுந்தரரிடம் அளவற்ற அன்புடையவரான குண்டையூர்க் கிழார் சுந்தரர் இல்லத்திற்கு நெல், பருப்பு முதலிய உணவுப் பொருள்களைத் தொடர்ந்து கொடுத்து வந்தார். ஒரு சமயம், மழையின்மையால் விளைச்சல் குன்றியது. அதனால் சுந்தரருக்குப் பொருள்கள் வழங்க முடியாமல் குண்டையூர்க் கிழார் வருந்தினார். ஒரு நாள் அப்படி வருத்தத்தோடு இரவு உணவு உண்ணாமல் உறங்கியபோது, இறைவன் அருளால் குண்டையூர் முழுதும் குவியல் குவியலாக நெல் நிரம்பியது. குண்டையூர்க் கிழார்க்கு இறைவன் அதனைக் கனவில் உணர்த்தினான். எழுந்து அதனைக் கண்டு திருவருளை வியந்து தொழுதார். அந்நெல் அனைத்தையும் திருவாரூருக்கு எடுத்துச்சென்று கொடுக்கத் தம்மால் இயலாது என்று உணர்ந்து இச்செய்தியைச் சுந்தரருக்குத் தெரிவிக்கத் திருவாரூருக்குச் சென்றார். அதன் முன்னரே ஈசன் சுந்தரருக்கும் இச்செய்தியை உணர்த்தினான்; சுந்தரரும் குண்டையூர் நோக்கிச் சென்றார்; இருவரும் வழியில் சந்தித்தனர்; சுந்தரருக்குச் செய்தியைக் கூறி, அந்தப் பெரிய நெல் மலையை மனிதரால் எடுத்துச் செல்ல இயலாது என்றார் குண்டையூர்க் கிழார். சுந்தரரும், அதனை நேரில் கண்டு, திருவருளை வியந்து, குண்டையூர்க்கு அருகே உள்ள திருக்கோளிலிக்குச் சென்று, நெல் எடுக்க ஆள் வேண்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம். 00:24 நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன் வாளன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே. ..... (01) 03:59 வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய் விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே தெண்திரை நீர் வயல்சூழ் திருக்கோளிலி எம்பெருமான் அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தரப் பணியே. ..... (02) 06:20 பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடைக் கங்கை வைத்தாய் மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே கோதில் பொழில் புடைசூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ஆதியே அற்புதனே அவை அட்டித்தரப் பணியே. ..... (03) 07:37 சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ கொல்லை வளம் புறவில் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே. ..... (04) 09:07 முல்லை முறுவல் உமை ஒரு பங்குடை முக்கணனே பல்லயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா கொல்லை வளம் புறவில் திருக்கோளிலி எம்பெருமான் அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே. ..... (05) 10:04 குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய் பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே குரவு அமரும் பொழில்சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் அரவம் அசைத்தவனே அவை அட்டித்தரப் பணியே. ..... (06) 11:01 எம்பெருமான் உனையே நினைந்து ஏத்துவன் எப்பொழுதும் வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே செம்பொனின் மாளிகைசூழ் திருக்கோளிலி எம்பெருமான் அன்பது வாய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே. ..... (07) 13:06 அரக்கன் முடி கரங்கள் அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான் பரக்கும் அரவல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள் குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் இரக்கமதாய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே. ..... (08) 14:37 பண்டைய மால் பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் கண்டிலராய் அவர்கள் கழல் காண்பரிதாய பிரான் தெண்திரை நீர் வயல்சூழ் திருக்கோளிலி எம்பெருமான் அண்டமது ஆயவனே அவை அட்டித்தரப் பணியே. ..... (09) 16:08 கொல்லை வளம் புறவில் திருக்கோளிலி மேயவனை நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்து ஏத்திய பத்தும் வல்லார் அல்லல் களைந்து உலகின் அண்டர் வானுலகு ஆள்பவரே. ..... (10) பதிகப் பலன் : கொல்லையினது வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் விரும்பியிருக்கின்ற பெருமானை, நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான், தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி, மனம் பொருந்திப் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாடவல்லவர், இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி, அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள். ஆலய முகவரி : அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோவில், திருக்குவளை, திருக்குவளை அஞ்சல், திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN 610 204. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். ஏழாம் திருமுறை | சுந்தரர் தேவாரம் • Плейлист "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"