У нас вы можете посмотреть бесплатно #கருவினுருவாகி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Raga: விஜயநாகரி/vijayanaagari அருணகிரிநாதர்/arunagirinaadhar Talam: anga talam 5 1/2 aksharas (thakathakita thakita thakita) Sthalam: pazhani/பழனி Music by Guruji A S Raghavan கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர் உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே. karuvinuru vAgi vandhu vayadhaLavi lEva Larndhu kalaigaLpala vEthe rindhu ...... madhanAlE kariyakuzhal mAdhar thangaL adisuvadu mArbu dhaindhu kavalaiperi dhAgi nondhu ...... migavAdi araharasi vAya vendRu dhinamumninai yAmal nindRu aRusamaya needhi ondRum ...... aRiyAmal achanamidu vArgaL thangaL manaigaLthalai vAsal nindRu anudhinamu nANam indRi ...... azhivEnO uragapada mElva Larndha periyaperu mALa rangar ulagaLavu mAlma gizhndha ...... marugOnE ubayakula dheepa thunga virudhukavi rAja singa uRaipugali yUri landRu ...... varuvOnE paravai manai meedhi landRu orupozhudhu dhUdhu sendRa paramanaru LAlva Larndha ...... kumarEsA pagaiasurar sEnai kondRu amararsiRai meeLa vendRu pazhanimalai meedhil nindRa ...... perumALE. கருவில் தோன்றி, வயதுக்கு எற்றவாறு வளர்ந்து, பல கலைகளையும் கற்று, மன்மதன் சேட்டையால் அரிய பெண்களின் வலையில் பட்டு, மனம் நொந்து வாடி, அரகர சிவாய என்று உன்னை நாள்தோறும் நினையாமலும், ஆறு சமயங்களின் நெறிகளை அறியாமலும், உணவு கொடுப்போர் மனை வாசல்களில் நின்று வெட்கம் இல்லாமல் அழிந்து போவேனோ? பாம்பின் மேல் பள்ளி கொள்பவரும், உலகை மூன்று அடிகளால் அளந்தவருமாகிய அரங்கநாதப் பெருமாள் மனம் மகிழ்ந்த மருகனே. சீகாழியில் ஞான சம்பந்தராக அவதரித்தவனே. பரவை நாச்சியாரின் வீட்டில் அன்று சுந்தரருக்காகத் தூது சென்ற சிவ பெருமான் திருவருளால் வளர்ந்த குமரேசனே. அசுரர்கள் சேனைகளை மடிவித்து தேவர்களைச் சிறையிலிருந்து மீளும்படி வென்று, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. நான் விலை மாதர் இன்பத்தில் நாணம் இன்றி அழிவேனோ? Meaning courtesy: திருப்புகழ் அம்ருதம்