У нас вы можете посмотреть бесплатно திருஇராமேச்சுரம்(இராமேஸ்வரம்) - திரிதரு மாமணி நாகம் ஆட - திருஞானசம்பந்தர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
03.101 திருஇராமேச்சுரம்(இராமேஸ்வரம்) | திரிதரு மாமணி நாகம் ஆட | திருஞானசம்பந்தர் தேவாரம் | மதுரை முத்துக்குமரன் ஓதுவார் #RamanathaswamyTemple | #Rameshwaram | #ThiruneriyaThamizhosai | #Thirugnanasambandhar | #Thevaaram இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம். இறைவர் : ஸ்ரீ ராமநாதசுவாமி இறைவியார் : ஸ்ரீ பர்வதவர்த்தினி இராவணனைக் கொன்ற பிரமஹத்தி நீங்குவதற்காக இராமன், சீதை, இலட்சுமணனுடன் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல வேளை குறித்து கைலாசத்திலிருந்து லிங்கம் கொண்டு வரும்படியாக இராமன் அனுமானை அனுப்ப, நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து ஆஞ்சநேயர் லிங்கம் கொண்டுவருவதற்குக் காலம் தாழ்ந்ததால், சீதை மணலால் செய்த லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டனர். திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்யப்பெற்ற லிங்கத்தை அகற்ற முயன்றும் இயலவில்லை. அனுமனை ஆறுதல் செய்வதற்காக இராமலிங்கத்தின் பக்கத்தில் அனுமன் கொண்டுவந்த விசுவலிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கே பூசை முதலியன முதலில் செய்ய வேண்டுமென்று இராமன் ஆணையிட்டார். இராமபிரான் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் என்றும், அவர் சீதையுடன் புஷ்ப விமானத்தில் இலங்கையிலிருந்து அயோத்திக்குச் செல்லும் போது இந்தத் தலத்தைக் காட்டினார் என்றும் இராமாயணம், சிவபுராணம், பத்மபுராணம், முதலியவற்றில் கூறப்பட்டிருக்கிறது. எவ்வாராயினும் இராமர் இந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை. இது, ஜோதிர்லிங்கத் தலங்கள் பன்னிரண்டனுள் ஒன்றாகும்.இத்திருக்கோயில் காசிக்கு நிகரான யாத்திரைத் தலமாக முக்கியத்துவம் பெற்றது. காசிக்குத் தொடங்கப்பட்ட யாத்திரை இராமேசுவரத்தில் மூர்த்தியை வழிபட்ட பின்னர்தான் முடிவு பெறுகின்றது. காசிக்குச் சென்ற பயன் கைகூடுவது இராமேசுவரத்தில் தான் என்பது ஆன்றோர் வாக்கு. 00:13 திரிதரு மாமணி நாகம் ஆடத் திளைத்து ஒரு தீ அழல்வாய் நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய விரி கதிர் வெண்பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே. ..... (01) 04:13 பொறிகிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட தெறிகிளரப் பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் எறிகிளர் வெண்திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய மறிகிளர் மான் மழுப் புல்கு கை எம் மணாளர் செயும் செயலே. ..... (02) 07:19 அலைவளர் தண்புனல் வார்சடைமேல் அடக்கி ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடி மயக்கா வருமாட்சி இலைவளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் தலைவளர் கோலநன் மாலை சூடும் தலைவர் செயும் செயலே. ..... (03) 09:08 மாதன நேரிழை ஏர் தடங்கண் மலையான் மகள் பாட தேதெரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் ஏதமிலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் போது வெண்திங்கள் பைங்கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே. ..... (04) 11:10 சூலமோடு ஒண்மழு நின்று இலங்க சுடுகாடு இடமாகக் கோலநன் மாதுடன் பாட ஆடும் குணமே குறித்து உணர்வார் ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய நீலமார் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே. ..... (05) 12:49 கணைபிணை வெஞ்சிலை கையில் ஏந்தி காமனைக் காய்ந்தவர் தாம் இணைபிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினராகி நல்ல இணைமலர் மேலன்னம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் அணைபிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே. ..... (06) 14:20 நீரினார் புன்சடை பின்பு தாழ நெடு வெண்மதி சூடி ஊரினார் துஞ்சிருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் ஏரினார் பைம்பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய காரினார் கொன்றை வெண்திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே. ..... (07) 15:25 பொன்திகழ் சுண்ண வெண்நீறு பூசி புலித்தோல் உடையாக மின்திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வருமாட்சி என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார் குன்றினால் அன்று அரக்கன் தடந்தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே. ..... (08) 16:46 கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகாய மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர் இறை மெய்ம்மை ஏவலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய சேவல வெல்கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே. ..... (09) 18:18 பின்னொடு முன்னிடு தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவாரும் பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறம் கூறல் கேளாதே இன்னெடுஞ் சோலை வண்டு யாழ்முரலும் இராமேச்சுரம் மேய பன்னெடு வெண்தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே. ..... (10) 20:09 தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல் வாட்டி ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை நாவியன் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் பாவியன் மாலை வல்லார் அவர் தம் வினையாயின பற்றறுமே. ..... (11) பதிகப் பலன் : சீதா தேவியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமையை அழித்து, அம்பு எய்யும் வில்லேந்திய இராமபிரான் வழிபட்ட திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில், விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை, நாவலராகிய ஞானசம்பந்தர், நல்ல மொழியால் போற்றிப் பாடிய பாட்டின் இலக்கணம் வாய்ந்த இப்பாமாலையை, ஓதி வழிபட வல்லவர்களின் வினைகள், முற்றிலும் அழியும். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"