У нас вы можете посмотреть бесплатно திருமறைக்காடு(வேதாரண்யம் / வேதவனம்) - கற்பொலி சுரத்தினெரி கானினிடை - திருஞானசம்பந்தர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
03.076 திருமறைக்காடு(வேதாரண்யம் / வேதவனம்) | கற்பொலி சுரத்தினெரி கானினிடை | திருஞானசம்பந்தர் தேவாரம் | திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் #Thirumaraikadu | #VedaranyeswararTemple | #ThiruneriyaThamizhosai | #Thirugnanasambandhar | #Thevaaram தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார். இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. இறைவர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன் இறைவியார் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள் இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி கோளறு திருப்பதிகம் பாடியருளினார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டுக் கோயிலுள் புகுந்து பிரதட்சிணம் செய்து சன்னிதி முன்பு சென்று சேர்ந்தனர். வேதங்கள் பூஜித்துக் கதவைத் திருக்காப்புச் செய்த நாள்முதல் அன்றுவரை அந்தக் கதவு அடைத்தே இருந்தது. பக்கத்தில் வேறொரு வாயில் வழியாக அடியவர்கள் சென்று வழிபட்டு வந்தனர். சம்பந்தரும் அப்பரும் இச்செய்தியைக் கேட்டறிந்தனர் "சன்னிதி முன் உள்ள கதவு திருக்காப்பு நீங்கப் பாடும் அப்பரே" என்று சம்பந்தர் திருநாவுக்கரசரை வேண்டினார். அச்சமயத்தில் திருநாவுக்கரசர் "பண்ணின் நேர் மொழியாள்" என்று தொடங்கும் பதிகத்தைப் பாடியருளினார். பதிகத்தின் நிறைவில் ஈசன் அருளால் கதவு திறந்தது. இருவரும் சன்னிதியுள் சென்று இறைவனைப் போற்றி வழிபட்டனர். பிறகு இருவரும் வெளியே வந்தனர். அப்பொழுது திருநாவுக்கரசர் சம்பந்தரிடம் "இனி எப்பொழுதும் இக்கதவுகளைத் திறத்தலும் மூடுதலும் நிகழட்டும் ஆகவே இக்கதவுகள் மூடுவதற்கு பாடியருளுங்கள்" என்று கூறினார். சம்பந்தர் "சதுரம் மறைதான்" என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடினார். முதற்பாட்டைப் பாடியதுமே கதவுகள் மூடிக்கொண்டன. 00:12 கற்பொலி சுரத்தினெரி கானினிடை மாநடம் அது ஆடி மடவார் இற்பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவிமேல் மற்பொலி கலிக்கடன் மலைக்குவடு எனத்திரை கொழித்த மணியை விற்பொலி நுதற் கொடியிடைக் கனிகைமார் கவரும் வேதவனமே. ..... (01) 02:32 பண்டிரை பயப்புணரியில் கனகமால் வரையை நட்டு அரவினைக் கொண்டு கயிறிற் கடைய வந்த விடம் உண்ட குழகன் தன் இடமாம் வண்டிரை நிழல் பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல் வெறியார் வெண்டிரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே. ..... (02) 05:21 காரியன் மெல்லோதி நதிமாதை முடி வார்சடையில் வைத்து மலையார் நாரியொருபால் மகிழும் நம்பருறை என்பர் நெடுமாடம் மறுகில் தேரியல் விழாவினொலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் வேரிமலி வார்குழனன் மாதரிசை பாடலொலி வேதவனமே. ..... (03) 06:57 நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி வந்திடபமே ஏறி உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதியாம் ஊறு பொருளின் தமிழியல் கிளவி தேரும் மடமாதர் உடனார் வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே. ..... (04) 08:24 கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம் எத்தனை உலப்பில் கருவித்திரள் அலம்ப இமையோர்கள் பரச ஒத்தற மிதித்து நடமிட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே. ..... (05) 09:29 மாலைமதி வாளரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழலக் காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனலாடும் அரனூர் சோலையின் மரங்கள்தொறும் மிண்டி இனவண்டு மது உண்டு இசைசெய வேலையொலி சங்குதிரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே. ..... (06) 10:31 வஞ்சக மனத்து அவுணர் வல்லரணம் அன்று அவிய வார்சிலை வளைத்து அஞ்சகம் அவித்த அமரர்க்கு அமரன் ஆதி பெருமானது இடமாம் கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில விஞ்சுக இயக்கர் முனிவக்கணம் நிறைந்துமிடை வேதவனமே. ..... (07) 11:22 முடித்தலைகள் பத்துடை முருட்டுரு அரக்கனை நெருக்கி விரலால் அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பலதுயர் கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே. ..... (08) 12:17 வாசமலர் மேவி உறைவானும் நெடுமாலும் அறியாத நெறியைக் கூசுதல் செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரனூர் காசு மணி வார் கனகம் நீடு கடலோடு திரைவார் துவலைமேல் வீசுவலை வாணரவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே. ..... (09) "இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று" 13:24 மந்த முரவம் கடல் வளங்கெழுவு காழிபதி மன்னு கவுணி வெந்தபொடி நீறணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால் சந்தமிவை தண் தமிழின் இன்னிசை எனப் பரவு பாடலுலகில் பந்தனுரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வானுலகமே. ..... (11) ஆலய முகவரி : அருள்மிகு வேதாரண்யேசுவரர் திருக்கோவில், வேதாரண்யம், வேதாரண்யம் அஞ்சல், வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN : 614 810. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"