У нас вы можете посмотреть бесплатно திருவிசயமங்கை(திருவிஜயமங்கை) - மருவமர் குழலுமை - திருஞானசம்பந்தர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
03.017 திருவிசயமங்கை(திருவிஜயமங்கை) | மருவமர் குழலுமை | திருஞானசம்பந்தர் தேவாரம் | @ThiruneriyaThamizhosai Sri Vijaya Natheswarar Temple | Thiruvijayamangai | Vijayanatheswarar Temple | Thevaram Padal Pettra Sthalam | Thirugnanasambanthar Thevaaram | Thiruneriya Thamizhosai பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடக்கப் போகும் போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். பகவான் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி சிவபெருமானிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற அர்ஜுனன் இத்தலத்தில் ஈசனை நோக்கி தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. தன்னத் தாக்க வந்த அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. சிவபெருமான் அர்ஜுனனுக்குக் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரம் அளித்து மறைந்தார். அர்ஜுனன் (விஜயன்) ஈசனை பூஜித்த தலமாதலால் இத்தலம் திருவிஜயமங்கை என்று பெயர் பெற்றது. அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை லிங்கத்தின் மீது காணலாம். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ விஜயநாதேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மங்கை நாயகி திருமுறை : மூன்றாம் திருமுறை 017 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் உள்ளன. ஊரின் பெயர் கோவந்தபுத்தூர். விசயமங்கை என்பது கோயிலின் பெயராகும். ஒரு பசு(கோ) இலிங்கத் திருமேனியின்மீது தன் மடியிலுள்ள பாலைச் சொரிந்து வழிபட்ட காரணத்தால் கோவந்தபுத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது. ஊரின் பெயர் கோவந்தபுத்தூர் என்பதையும், கோவிலின் பெயர் விசயமங்கை என்பதையும் அப்பர் பெருமான் தனது பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிடுகிறார். 00:14 மருவமர் குழலுமை பங்கர் வார்சடை அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம் குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள் விரவிய பொழிலணி விசயமங்கையே. ..... (01) 01:49 கீதம் முன் இசைதரக் கிளரும் வீணையர் பூதம் முன் இயல்புடைப் புனிதர் பொன்னகர் கோதனம் வழிபட குலவு நான்மறை வேதியர் தொழுது எழு விசயமங்கையே. ..... (02) 03:42 அக்கு அரவு அரையினர் அரிவை பாகமாத் தொக்க நல் விடையுடைச் சோதி தொன்னகர் தக்க நல் வானவர் தலைவர் நாள்தொறும் மிக்கவர் தொழுது எழு விசயமங்கையே. ..... (03) 05:54 தொடைமலி இதழியும் துன் எருக்கொடு புடைமலி சடைமுடி அடிகள் பொன்னகர் படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள் விடைமலி கொடி அணல் விசயமங்கையே. ..... (04) 06:48 தோடமர் காதினன் துதைந்த நீற்றினன் ஏடமர் கோதையோடு இனிது அமர்விடம் காடமர் மாகரி கதறப் போர்த்ததோர் வேடமது உடை அணல் விசயமங்கையே. ..... (05) 07:45 மைப்புரை கண்ணுமை பங்கன் வண்தழல் ஒப்புரை மேனியெம் உடையவன் நகர் அப்பொடு மலர்கொடு அங்கு இறைஞ்சி வானவர் மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே. ..... (06) 08:40 இரும்பொனின் மலைவிலின் எரிசரத்தினால் வரும் புரங்களைப் பொடிசெய்த மைந்தன் ஊர் சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும் விரும்பிய சடை அணல் விசயமங்கையே. ..... (07) 09:30 உளங்கையில் இருபதோடு ஒருபதும் கொடு ஆங்கு அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை தளர்ந்து உடல் நெரிதர அடர்த்த தன்மையன் விளங்கிழையொடும் புகும் விசயமங்கையே. ..... (08) 10:36 மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறை அண்ணல்கள் தமக்கு அளப்பரிய அத்தன் ஊர் தண்ணறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே. ..... (09) 11:52 கஞ்சியும் கவளமுண் கவணர் கட்டுரை நஞ்சினும் கொடியன நமர்கள் தேர்கிலார் செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர் விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே. ..... (10) 12:52 விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே. ..... (11) பதிகப் பலன் : விண்ணவர்கள் தொழுது வழிபடும் திருவிசய மங்கை என்னும் திருத்தலத்தை அடைந்து, திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தழிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் சிவபுண்ணியச் செல்வர்களாவர். அவர்கள் சிவகதி அடைவது உறுதியாகும். ஆலய முகவரி : அருள்மிகு விஜயநாதர் திருக்கோவில், திருவிசயமங்கை, புள்ளபூதங்குடி அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 612 301. எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து திருப்பறம்பியம் சென்று அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சென்றால் கொள்ளிட ஆற்றின் கரையில் உள்ள இத்தலத்தை அடையலாம். மற்றொரு சிவஸ்தலமான திருவைகாவூர் இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சுவாமிமலைக்கு மேற்கிலுள்ள அண்டக்குடி என்னும் ஊரிலிருந்தும் இத்தலத்தை அடையலாம். குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"