У нас вы можете посмотреть бесплатно அபிராமி அந்தாதி - கணபதி காப்பு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கணபதி காப்பு தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமிஅந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே. தார் அமர் மாலையில் அமைந்துள்ள கொன்றையும் – கொன்றைப் பூ மாலையும் சண்பகமாலையும் சண்பக மாலையும் சாத்தும் அணியும் தில்லை ஊரர் தில்லையில் – சிதம்பரத்தில் வாழும் நடராஜன் தம் பாகத்து அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும் உமை சிவகாமி – பார்வதி மைந்தனே மகனே உலகு ஏழும்பெற்ற ஏழுலகையும் பெற்ற சீர் அபிராமி சீர் பொருந்திய அபிராமி அன்னையின் அருளையும் அழகையும் எடுத்துக் கூறும் அந்தாதி அந்தாதி தொடையில் அமைந்த இந்த நூல் எப்போதும் என் எப்போதும் என் சிந்தையுள்ளே சிந்தையுள்ளே கார் அமர் மேனி மேகம் போல கருநிற மேனியை உடைய கணபதியே பேரழகு கணபதியே நிற்கக்கட்டுரையே அருள் புரிவாய். மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பக மாலையையும் முறையே அணிந்தருளுகின்ற தில்லயெம்பெருமானுக்கும், உமாதேவியாருக்கும் திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலைபெறும்படி திருவாய்மொழிந்தருளுவாயாக. தார்-மார்பின் மாலை. கொன்றை சிவபெருமானுக்கும், சண்பகம் அம்பிகைக்கும் உரிய மாலைகள்; சாம்பேயகுஸுமப்ரியா (435) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. உலகேழும் பெற்றது; “புவியேழையும் பூத்தவளே” (12) என்பர் பின். ஊரருக்கும் உமைக்கும் மைந்தனே என்க. உமை: இங்கே, சிவகாமசுந்தரி; “சேரும் தலைவி சிவகாமசுந்தரி” (68). அந்தாதி யென்றது இங்கே அந்தாதிப் பிரபந்தத்திற்குரிய சொற்பொருள் வளத்தை. கணபதியின் திருநிறம் வெண்மையென்றும் சிவப்பென்றும் கூறுவதும் உண்டு. அந்தாதி நிற்கக் கட்டுரை என்க. கட்டுரைத்தல் – பொருந்தும்படி திருவாய் மலர்ந்தருளுதல்; என்றது தம் உள்ளத்துள்ளே நின்று சொற்பொருள்களைத் தோற்றுவிக்க வேண்டுமென்று பிரார்த்தித்தபடி. விளக்கம்: கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக இத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.அடுத்த பதிவில் அம்பாளின் முதல் பாடலைப் பார்ப்போம். இந்தப் பாடலுக்கு அழகாக் பண்ணமைத்து இனிமையாகப் பாடியவர் டாக்டர்.சுகுணா வரதராஜன் அவர்கள் ஓம் நமசிவாய: ஓம் அபிராமியம்பிகையே நம: ஸிவதாஸன் ஜகன்நாதன்