У нас вы можете посмотреть бесплатно Karthar Nallavar | நமக்கு சகாயம் கர்த்தரிடத்திலிருந்து வரும் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன். எரேமியா 15:11 கடந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை கண்மணி போல் பாதுகாத்தார். நாம் கர்த்தரை தேடிய நாட்களில் எல்லாம் அவர் நம்மை பாதுகாத்து ஜனவரி மாதத்தில் எந்த சேதமும் இல்லாமல் நம்மை வழி நடத்தி வந்தமைக்காக நம்முடைய நன்றி பலிகளை கர்த்தருடைய சமூகத்துக்கு முன்பாக ஏறெடுப்போம். இந்த இரண்டாம் மாதம் முதல் நாள் காலை வேளையில் நாம் கர்த்தரை தேடுகிற போது கர்த்தர் நமக்கு கொடுக்கிற வார்த்தை என்னவென்றால் அவர் சகாயராய் நம்மோடு கூட இருப்பார் என்பதே ஆகும். தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணம் அடையும் முன்னே இஸ்ரவேல் புத்திரர்களை ஆசீர்வதிக்கும் போது அதில் யூதாவை குறித்து கர்த்தர் உன்னை உன்னுடைய சத்துருக்களுக்கு நீங்கலாக்கி உன்னை விடுவிக்கிற சகாயராய் இருப்பார் என்று ஆசீர்வதித்தார். மேலும் இஸ்ரவேலை ஆசிர்வதிக்கும் போது நீ பாக்கியவான் கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே உனக்கு ஒப்பானவன் யார்? உனக்கு சகாயம் செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே என்று ஆசீர்வதித்தார். எகிப்து ராஜா எருசலேமுக்கு விரோதமாக வந்த போது, செமாயா தீர்க்கதரிசி ஜனங்களுக்கு முன்பாக ராஜாவிடமும் பிரபுக்களிடமும் நீங்கள் கர்த்தரை விட்டு விட்டீர்கள் எனவே சத்துருக்களின் கையில் நீங்கள் விழும்படி கர்த்தர் உங்களை விட்டு விட்டார் என்று சொன்னார். உடனே அவர்கள் தங்களை தாழ்த்தி கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள். அவர்கள் தங்களை தாழ்த்தியதை கர்த்தர் கண்டபோது என் உக்கிரம் அவர்களுடைய சத்துருக்களை கொண்டு எருசலேமின் மேல் ஊற்றப்படாதபடிக்கு அவர்களுக்கு கொஞ்சம் சகாயத்தை கட்டளையிடுவேன் என்றார். யூதாவின் ராஜா ரெகொபெயாமும், அதின் பிரபுக்கள் மற்றும் ஜனங்கள் தங்களை கர்த்தரிடத்தில் தாழ்த்தினபடியினால் கர்த்தர் சொல்லியபடியே எகிப்து ராஜா யூதாவை முற்றிலும் அழிக்காதபடிக்கு அவருடைய கோபம் எருசலேமை விட்டு திரும்பிற்று. அடுத்ததாக யூதாவின் ராஜாவாக யோசபாத் இருந்தபோது மோவாப் புத்திரரும் அம்மோன் புத்திரரும் சேயீர்மலை தேசத்தாரும் யோசபாத்துக்கு எதிராக ஏராளமாய் வந்தார்கள். உடனே யோசபாத்தும் யூதாஜனங்களும் கர்த்தரிடத்திலே சகாயம் தேட கூடினார்கள். பரலோகத்தில் இருக்கிற தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்திய போது கர்த்தர் யகாசியேலை கொண்டு சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள், நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள், இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார் என்றார். அதன்படியே கர்த்தரிடத்தில் இருந்து அவர்களுக்கு சகாயம் வந்ததால் சத்துருக்கள் தங்களுக்குள்ளே ஒருவருக்குஒருவர் விரோதமாக எழும்பி வெட்டுண்டு விழுந்தார்கள். அடுத்ததாக எரேமியாவிடம் கர்த்தர் தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன் என்றார். அந்தபடியே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கர்த்தருக்கு பயப்படாமல் வாழ்ந்ததால், கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசி ஆகிய எரேமியாவை கொண்டு சொல்லிய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமலும் இருந்ததால், கர்த்தர் பாபிலோன் ராஜாவை எருசலேமுக்கு விரோதமாக எழுப்பியதால் அவர்கள் வந்து சிதேக்கியாவை சிறைபிடித்து, அரண்மனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து எருசலேமின் மதில்களை இடித்துப் போட்டார்கள். ஆனாலும் பாபிலோன் ராஜாவின் காவற்சேனாதிபதி சிறையில் இருந்த எரேமியாவை அழைத்து இப்போதும், இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன், என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய்த்தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன், என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்: இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான். கர்த்தர் எரேமியாவுக்கு தான் சொன்னபடியே சத்துருக்களிடமிருந்து சகாயம் கிடைக்கசெய்தார். கர்த்தருக்கு பிரியமானவர்களே கர்த்தரைத் தேடி அவருக்கு முன்பாக தங்களை தாழ்த்தி, அவருக்குப் பயந்து அவருக்குப் பிரியமாய் வாழ்பவர்களுக்கு கர்த்தர் சகாயம் செய்கிறவராய் இருக்கிறார். எப்படி என்றால், அவர்களுக்கு எதிராக வருகிற சூழ்நிலைகளை மாற்றி போடுவார், அவர்களுக்கு எதிராக வருகிற சத்துருக்களை அழிப்பார் அல்லது அவர்களுக்கு எதிராக வருகிற சத்துருக்களைக் கொண்டே அவர்களுக்கு சகாயம் செய்வார். ஆமென். சர்வ வல்லமையுள்ள சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மை தேடி நாடி, எங்கள் முழுஇருதயத்தோடும் உம்முடைய நாமத்தை பயத்தோடும் விசுவாசத்தோடும் தொழுது கொள்கிற எங்களுக்கு, தேவரீர் சகாயராய் இருக்க வேண்டும் என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்இன்ப நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை இன்று முழுவதும் நம்மோடு கூட இருப்பதாக ஆமென். #KARTHARNALLAVAR #கர்த்தர்நல்லவர் #Morningdevotion #TamilMessage #Shortmessage #GoodMorning #PraisetheLord #Gospel #Gospelmessage #Hope #Word #Godsword #Godword #TodayMessage #TodayWord #Bibleword #Hopeword #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood. #Kartharnallavar #TamilMessage #Morningdevotion #Praise# the Lord #Gospel #Gospelmessage #Hope #Word #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood #Prophetic word, #Prophetic voice #இறைவார்த்தை #இன்றைய வார்த்தை #இன்றையமன்னா #கர்த்தர் நல்லவர் #Goodword #kartharnallavar #gospel #hope #tamilmessage #word #morningdevotion #godisgood #prophetic #successway