У нас вы можете посмотреть бесплатно Karthar Nallavar | வல்லமையும், மகத்துவமும் உள்ள கர்த்தரின் சத்தத்தை நாம் கேட்கும் படியாக ஆயத்தமாவோம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது, கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது. சங்கீதம் 29:4 கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது, கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது என்று தாவீது சொல்கிறார். கர்த்தருைடைய சத்தத்தின் ஆற்றல் மகத்துவம் என்பது நம்மால் தியானிக்க ஆராய முடியாதது. ஆனாலும் சில எடுத்துக்காட்டுக்களை பரிசுத்த வேதாகமத்தில் தியானிக்கலாம், கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கும் வல்லமையுள்ளது. ஆம் கடல் அலையும் அவர் சத்தத்திற்கு அடங்கும் செங்கடல் பிரியும், யோர்தான் ஒரே குவியலாக நிற்க்கும் கற்பாறையில் இருந்து தண்ணீர் ஓடிவரும்படியும் செய்யக்கூடிய வல்லமையுடையது. கர்த்தருடைய சத்தம் கேதுரு மரங்களை முறிக்கிறது, கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும். ஆம் எரிகிற அக்கினி ஜூவாலையின் நடுவில் தான் தங்கள் ஆடைகள் எரியாமல், தலைமுடி கருகாமல் உடல் வேகாமல் உன்னதமான தேவனுடைய தாசர்களாகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலே உலாவிக் கொண்டு இருந்தார்கள். கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும், கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார். வனாந்திரத்தில் தண்ணீர் ஓடவும், வனாந்திரம் வயல்வெளியாய் மாறசெய்வதும் கர்த்தருடைய சத்தத்தின் வல்லமைதானே, கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும் அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள். கர்த்தருடைய சத்தம் ஆடுகள் மாடுகள் மான்கள் போன்ற விலங்கினங்கள் மட்டுமல்ல, முதிர்வயதினால் ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நின்று போன சாராளுக்கு பிள்ளைபேறு கொடுத்தது. கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது. ஆம் எரிகோ கோட்டையை தகர்க்கும் வல்லமை கர்த்தரின் சத்தத்திற்கு உண்டு. மேலும் கர்த்தர் தன்னுடையவர்களுக்கோ நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது என்ற வாக்குத்தத்தத்தை தன்னுடைய சத்தத்தின் வல்லமையினாலே கொடுத்தார். கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது. அதனால்தான் கர்த்தர் என் சத்தத்திற்கு கவனமாய் செவி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். காரணம் கர்த்தருடைய சத்தம் நம்முடைய செவிகளில் சில சமயம் கேட்பதில்லை சில சமயம் நாம் கேட்டும் அவைகளை புரிந்து கொள்வதில்லை சில சமயம் நாம் அவைகளை கவனித்து கேட்பதில்லை. மாறுபாடான எண்ணங்களையும் முறுமுறுப்புகளையும் கொண்டிருக்கிற இருதயமும் கர்த்தருடைய சத்தத்தை உணராது கேட்காது. ஆனால் நம்முடைய ஆத்துமா கர்த்தரை நோக்கி காத்திருக்குமானால் அவருடைய சத்தத்தை கேட்கும் அதன்படியே நடத்தும். சுவாசம் உள்ள யாவும், கர்த்தரால் உண்டாக்கப்பட்ட எந்த ஆத்துமாவும் கர்த்தருடைய சத்தத்தை கேட்கும் அதுதான் கர்த்தருடைய சத்தத்தின் மகத்துவம். கர்த்தரின் சத்தத்தை காகம் கேட்டுதான் எலியாவுக்கு காலையும், மாலையும் என சிலகாலம் அப்பமும், இறைச்சியும் கொடுத்தது. கடலின் அடியில் இருக்கும் மீன், கர்த்தரின் கட்டளை சத்தத்தை கேட்டு, யோனாவை விழுங்கியது யோனாவை கரையில் கொண்டு போய் கக்கியது, கர்த்தரின் சத்தத்தை கேட்டுதான் மரித்துபோன விதவையின் மகனை மட்டுமல்ல, லாசருவையும் உயிரோடு எழுப்பியது. கர்த்தருக்கு பிரியமானவர்களே இப்படிப்பட்ட கர்த்தருடைய சத்தத்தின் வல்லமையையும் மகத்துவத்தையும் அறிந்திருக்கிற நம்முடைய ஆத்துமாவும் அவருடைய சத்தத்தை கேட்க வாஞ்சிக்கும் போது விரும்பும் போது நாடும்போது தேடும்போது நம்மால் கேட்கமுடியும். எனவே நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தருடைய வல்லமையையும் மகத்துவத்தையும், அதிசயங்களையும் அற்புதங்களையும் பெற வேண்டுமானால் நம்முடைய ஆத்துமாவும் அவருடைய சத்தத்தை கேட்டு உயிர்பிக்கும்படியாக வாஞ்சிப்போம். ஆமென். சர்வ வல்லமை உள்ள சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய சத்தத்தின் வல்லமையையும், மகத்துவத்தையும் அறிந்திருக்கிற எங்களுடைய ஆவி ஆத்மா சரீரம், மானானது நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல, அனு தினமும் உம்முடைய சத்தத்திற்காக வாஞ்சித்து, அந்த வல்லமையுள்ள சத்தத்தை கேட்டு அதற்கு கீழ்ப்படிந்து நடக்கக்கூடிய கிருபைகளை எங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எங்களுக்கு தந்தருள வேண்டும் என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை இன்று முழுவதும் நம்மோடு கூட இருப்பதாக ஆமென். #Kartharnallavar #God is Good #KARTHARNALLAVAR #கர்த்தர்நல்லவர் #Morningdevotion #TamilMessage #Shortmessage #GoodMorning #PraisetheLord #Gospel #Gospelmessage #Hope #Word #Godsword #TodayMessage #TodayWord #Bibleword #Hopeword #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood. #Kartharnallavar #TamilMessage #Morningdevotion #Praise# the Lord #Gospel #Gospelmessage #Hope #Word #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood #Prophetic word, #Prophetic voice #இறைவார்த்தை #இன்றைய வார்த்தை #இன்றையமன்னா #கர்த்தர்நல்லவர் #Goodword #kartharnallavar #gospel #hope #morningdevotion #tamilmessage #word #godisgood #prophetic #successway