У нас вы можете посмотреть бесплатно திருபரிதிநியமம் | வாரம் ஒரு தேவாரம் | போகிற வழிக்கு புண்ணியம் l திருமுறை 3-104 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருபரிதிநியமம் | வாரம் ஒரு தேவாரம் | போகிற வழிக்கு புண்ணியம் l திருமுறை 3-104 Video contents: 00:00 Intro 00:31 தேவாரம் முன்னுரை 02:34 திருபரிதிநியமம் தேவார முன்னுரை 03:22 1. விண்கொண்ட தூமதி சூடி நீடு விரி புன்சடை தாழப் 04:14 2. அரவொலி வில்லொலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும் 05:05 3. வாண்முக வார்குழல் வாள் நெடுங்கண் வளைத்தோள் மாது அஞ்ச 06:08 4. வெஞ்சுரம் சேர் விளையாடல் பேணி விரிபுன்சடை தாழத் 06:57 5. நீர் புல்கு புன்சடை நின்று இலங்க நெடுவெண்மதி சூடித் 07:38 6. வெங்கடும் காட்டகத்து ஆடல் பேணி விரிபுன் சடை தாழத் 08:20 7. பிறைவளர் செஞ்சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி 09:08 8. ஆசடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த 09:58 9. நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்தக் 10:38 10. கல்வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கான 11:20 11. பையரவம் விரி காந்தள் விம்மும் பரிதிந் நியமத்து பதிக எண்: 3.104 திருபரிதிநியமம் பழம்பஞ்சுரம் பாடல் 1: விண்கொண்ட தூமதி சூடி நீடு விரி புன்சடை தாழப் பெண் கொண்ட மார்பில் வெண்ணீறு பூசிப் பேணார் பலி தேர்ந்து கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கிடம் போலும் பண் கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே பாடல் 2: அரவொலி வில்லொலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும் நிரவ வல்லார் நிமிர் புன்சடை மேல் நிரம்பா மதி சூடி இரவில் புகுந்தென் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் பரவ வல்லார் வினை பாழ் படுக்கும் பரிதிந் நியமமே பாடல் 3: வாண்முக வார்குழல் வாள் நெடுங்கண் வளைத்தோள் மாது அஞ்ச நீண் முகமாகிய பைங்களிற்றின் உரி மேல் நிகழ்வித்து நாண்முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் பாண்முக வண்டினம் பாடி ஆடும் பரிதிந் நியமமே பாடல் 4: வெஞ்சுரம் சேர் விளையாடல் பேணி விரிபுன்சடை தாழத் துஞ்சிருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து அஞ்சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிந் நியமமே பாடல் 5: நீர் புல்கு புன்சடை நின்று இலங்க நெடுவெண்மதி சூடித் தார் புல்கு மார்பில் வெண்ணீறு அணிந்து தலையார் பலி தேர்வார் ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் பார் புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதிந் நியமமே பாடல் 6: வெங்கடும் காட்டகத்து ஆடல் பேணி விரிபுன் சடை தாழத் திங்கள் திருமுடி மேல் விளங்கத் திசையார் பலி தேர்வார் சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும் பைங்கொடி முல்லை படர் புறவில் பரிதிந் நியமமே பாடல் 7: பிறைவளர் செஞ்சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி மறையொலி பாடி வெண்ணீறு பூசி மனைகள் பலி தேர்வார் இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் பறையொலி சங்கொலியால் விளங்கும் பரிதிந் நியமமே பாடல் 8: ஆசடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த மாசடையாத வெண்ணீறு பூசி மனைகள் பலி தேர்வார் காசடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் பாசடைத் தாமரை வைகு பொய்கைப் பரிதிந் நியமமே பாடல் 9: நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்தக் கூடலர் ஆடலராகி நாளும் குழகர் பலி தேர்வார் ஏடலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிந் நியமமே பாடல் 10: கல்வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கான சொல் வளமாக நினைக்க வேண்டா சுடுநீறு அது ஆடி நல்வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் பல்வளர் முல்லையம் கொல்லை வேலிப் பரிதிந் நியமமே பாடல் 11: பையரவம் விரி காந்தள் விம்மும் பரிதிந் நியமத்து தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞானசம்பந்தன் பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த ஐயுறவில்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே