У нас вы можете посмотреть бесплатно Karthar Nallavar | இறையாண்மையைஎன்ற இந்தியஅரசியல்அமைப்புசட்டம் உருவான குடியரசுதினநாள்நல்வாழ்த்துக்கள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். எஸ்தர் 4:14 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேரு ராஜாவின் நாட்களில் சம்பவித்ததாவது: அகாஸ்வேரு ராஜா ஆமான் என்பவனை மேன்மைப்படுத்தி தன்னிடத்தில் இருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்தி வைத்திருந்தான். சகல அதிகாரத்தையும் உடைய அந்த ஆமான் ராஜாவிடம் உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரவியிருக்கிறார்கள். அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது. ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. ராஜா சம்மதித்தால், அவர்களை அழிக்கவேண்டும் என்றான். அப்பொழுது ராஜா அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான். அந்த ஜனம் யார் என்றால் மனிதனையும், மனிதனால் படைக்கப்பட்டவைகளையும் மனிதனால் உண்டாக்கப்பட்ட உருவாக்கப்பட்டவைகளையும் வணங்காமல், வானத்தையும் பூமியையும் அதில் உண்டான யாவற்றையும் உண்டாக்கிய உருவாக்கிய சர்வ வல்லமை உள்ள சேனைகளின் தேவனை வழிபடுகிறவர்களே அந்த ஜனம். அதாவது அந்த ஜனமே கர்த்தருடைய ஜனம். ஆமான் ராஜாவின் கட்டளையை பெற்றுக் கொண்டதை அறிந்த மொர்தெகாய், ராஜ அரண்மனையில் இருந்த எஸ்தர் ராணியிடம் நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது எஸ்தர்ராணி தன் ஜனங்கள் எல்லோரையும் மூன்று நாள் அல்லும் பகலும் பூசியாமலும் குடியாமலும் இருந்து உபவாசம் பண்ணி ஜெபியுங்கள் என்றாள். அந்த ஜனத்தார் ஜெபித்தார்கள் காரியம் மாறுதலாய் முடிந்தது. இது நாம் யாவரும் அறிந்ததே. இது எங்கு எப்போது நடந்தது என்றால்; இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் நடந்தது. இந்து தேசம் என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்திய தேசத்தின் 77வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள், கர்த்தருக்கு பிரியமானவர்களே இன்று நாம் கர்த்தர் நமக்கு சுதந்திரமாக கொடுத்த இந்திய தேசத்தின் பெருமைமிகு 77 வது குடியரசு தின விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறோம். குடியரசு தினம் என்பது இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாறி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் ஒரு தேசிய விடுமுறை நாள் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததைக் குறிக்கிறது. இது, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயகக் குடியரசாக மாறியதைக் குறிக்கிறது, மேலும் இது சுதந்திர தினத்திலிருந்து வேறுபடுகிறது, ஏனெனில் சுதந்திர தினம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலையைக் குறிக்கிறது. ஆனால் இது ஒரு ஜனநாயகத்திற்கு அடித்தளமிட்ட நாளாகும். யாதொருவரும் மதச்சார்பின்மையை பின்பற்றி எந்த ஒரு மதத்தையும் பின்பற்றலாம், வணங்கலாம் என்றும் இந்த நாள் இந்திய குடிமக்களுக்கு தங்கள் சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை அளித்து, ஜனநாயகத்தின் அடித்தளத்தை அமைத்த நாளாகும். இறையாண்மை ஆகிய மதச்சார்பின்மையை நமக்கு பெற்று கொடுத்த இந்த நாளை நாம் கொண்டாடுகிற போது, இந்த நாளில் தமிழ்நாட்டில் இறையாண்மையை கொண்டாடுகிற நாம் இந்திய தேசம் முழுவதும் இது காக்கப்பட, நடைமுறைப்படுத்தப்பட, மனிதனையும் மனிதனால் உண்டாக்கப்பட்டவைகளையும் உருவாக்கப்பட்டவைகளையும் வணங்க நிர்ப்பந்திக்கப்படாமல், பெருமைமிகு இந்தியாவின் இறையாண்மைக்காக நாம் ஜெபிப்பது நம்முடைய கடமை. ராஜாவைப் போன்றும் ஆமானை போன்றும் சட்டங்கள் கொண்டுவரும் இந்தக் காலத்திலே நாம் மவுனமாயிருந்தால், நம் ஜனத்திற்கு சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நாமும் நம்தகப்பன் குடும்பத்தாரும் அழிவோம். எனவே இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி நம்முடைய தேசத்திற்காகவும், நாம் வாழுகின்ற இந்த தமிழ்நாட்டிற்காகவும், நமக்கு இறையாண்மையை கொடுத்த இந்த 77 வது குடியரசு தினத்தை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற வேளையில், நம்முடைய துதி ஸ்தோத்திரங்களையும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் தேவனிடத்தில் தெரிவிப்போம். நமக்கு சகாயமும் இரட்சிப்பும் தேவனிடத்திலிருந்து கிடைக்கும் காரியங்கள் மாறுதலாய் முடியும் ஆமென். #Kartharnallavar #God is Good #KARTHARNALLAVAR #கர்த்தர்நல்லவர் #Morningdevotion #TamilMessage #Shortmessage #GoodMorning #PraisetheLord #Gospel #Gospelmessage #Hope #Word #Godsword #TodayMessage #TodayWord #Bibleword #Hopeword #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood. #Kartharnallavar #TamilMessage #Morningdevotion #Praise# the Lord #Gospel #Gospelmessage #Hope #Word #Blessingword #Blessingway #Goodway #Successway #Successword #Godisgood #Prophetic word, #Prophetic voice #இறைவார்த்தை #இன்றைய வார்த்தை #இன்றையமன்னா #கர்த்தர்நல்லவர் #Goodword #kartharnallavar #gospel #hope #tamilmessage #word #godisgood #morningdevotion #prophetic #successway