У нас вы можете посмотреть бесплатно திருக்கொடிமாடச்செங்குன்றூர் / வெந்த வெண்ணீறு / சம்பந்தர் தேவாரம் / или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
01.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்(திருச்செங்கோடு) | வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் | திருஞானசம்பந்தர் தேவாரம் #ArdhanareeswararTemple | #ThiruKodimadaChenguntrur | #Thiruchengode தேவாரப் பதிகங்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பாடப்பெற்ற சிவஸ்தலம் தற்போது திருச்செங்கொடு என்று கூறப்படுகிறது. இந்த சிவஸ்தலத்தில் உள்ள கோவில் மேற்கு நோக்கி ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த மலை செந்நிறமாக இருப்பதால், செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டது. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பாகம் பிரியாள் சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்று விட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை "நளிர்சுரம்" பற்றி வருத்த "அவ்வினைக்கு இவ்வினையாம்" என்னும் பதிகம் பாடி "தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்" என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணி தீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு. வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ் மார்பில் நல்ல பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. ..... (01) அலைமலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம் மலைமகள் கூறு உடையான் மலையார் இளவாழைக் குலைமலி தண் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே. ..... (02) பாலன நீறுபுனை திருமார்பில் பல்வளைக்கை நல்ல ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி கோல மலர்ப் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும் நீலநன் மாமிடற்றான் கழல் ஏத்தல் நீதியே. ..... (03) வாருறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும் காருறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளிச் சீருறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற நீருறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே. ..... (04) பொன்திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில் நல்ல பன்றியின் கொம்பு அணிந்து பணைத்தோளி ஓர் பாகமாகக் குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில் மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே. ..... (05) ஓங்கிய மூவிலை நல் சூலம் ஒரு கையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து கோங்கு அணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன தாள் தொழுவார் வினையாய பற்று அறுமே. ..... (06) நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்க் கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற சேடன தாள் தொழுவார் வினையாய தேயுமே. ..... (07) மத்தநன் மாமலரும் மதியும் வளர் கொன்றையுடன் துன்று தொத்தலர் செஞ்சடைமேல் துதைய உடன் சூடிக் கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே. ..... (08) செம்பொனின் மேனியனாம் பிரமன் திருமாலும் தேட நின்ற அம்பவளத்திரள் போல் ஒளியாய ஆதிபிரான் கொம்பு அணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய நம்பன தாள் தொழுவார் வினையாய நாசமே. ..... (09) போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல் ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரிக்குயில்கள் கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற வேதியனைத் தொழ நும் வினையான வீடுமே. ..... (10) அலைமலி தண்புனல் சூழ்ந்து அழகார் புகலிந்நகர் பேணும் தலை மகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூர் ஏத்தும் நலம் மலி பாடல் வல்லார் வினையான நாசமே. ..... (11) பதிகப் பலன் : அலைகள் மிகுந்த குளிர்ந்த நீரால் சூழப்பட்ட அழகிய புகலி நகரை விரும்பும் தலை மகனாகிய தமிழ் ஞானசம்பந்தன், கொல்லும் தொழிலில் வல்ல மூன்று இலை வடிவான சூலத்தைக் கையில் ஏந்தியவனாய சிவபிரான் எழுந்தருளிய கொடிமாடச் செங்குன்றூரைப் போற்றிப் பாடிய, நலம் மிக்க, இப்பதிகப் பாடல்களை ஓத, வல்லவர்களின் வினைகள் நாசமாகும். ஆலய முகவரி : அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், PIN - 637 211. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"