У нас вы можете посмотреть бесплатно SIVAVAAKIYAR SITHER PAADALGAL PART 13 சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் பகுதி-13 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
SIVAVAAKIYAR SITHER PAADALGAL PART 13 சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் பகுதி-13 #sivavakkiyarpadal #sivavakkiyar #sithergal#creator#saravananarunachalam#sunoai#sunomusic#sunov5 நாடிநாடி உம்முளே நயந்துகாண வல்லிரேல் ஓடியோடி மீளுவார் உம்முளே அடங்கிடும்.. நவ்வுமவ்வை யுங்கடந்து நாடொணாத சியின்மேல் வவ்வுயவ்வு ளுஞ்சிறந்த வண்மைஞான போதகம் ஒவ்வுசுத்தி யுள்நிறைந்த துச்சியூ டுருவியே இவ்வகை அறிந்த பேர் கள்ஈசன்ஆணை ஈசனே. அக்கரம் அனாதியோ வாத்துமம் அனாதியோ புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ. பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும் சுத்ததாய் இருப்பிரேல் குறிப்பிலச் சிவமதாம் பார்த்தபார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர் பூத்த பூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே. நாடிநாடி உம்முளே நயந்துகாண வல்லிரேல் ஓடியோடி மீளுவார் உம்முளே அடங்கிடும். நீரையள்ளி நீரில்விட்டு நீ நினைத்த காரியம் ஆரையுன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர் வேரையுன்னி வித்தையுன்னி விதத்திலே முளைத்தெழுந்த சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம். நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை உய்த் துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியைப் பத்தியில் தொடர்ந்தவர் பரமயம தானவர் அத்தலத்தில் இருந்தபேர்கள் அவரெனக்கு நாதரே. கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்றது எவ்விடம் உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்றது எவ்விடம் அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது எவ்விடம் திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுவீர். கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்ற தேயுவில் உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்புநின்றது அப்புவில் அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்ற வாயுவில் திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுமே. நாடிநாடி உம்முளே நயந்துகாண வல்லிரேல் ஓடியோடி மீளுவார் உம்முளே அடங்கிடும்.. தாதரான தாதரும் தலத்திலுள்ள சைவரும் கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம் வீதிபோகு ஞானியை விரைந்துகல் எறிந்ததும் பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே. ஓடியோடி பாவியழைத்து உள்ளங்கால் வெளுத்ததும் பாவியான பூனைவந்து பாலிலே குதித்ததும் பணிக்கன் வந்து பார்த்ததும் பாரமில்லை என்றதும் இழையறுந்து போனதும் என்னமாயம் ஈசனே. சதுரம்நாலு மறையும்எட்டு தானதங்கி மூன்றுமே எதிரதான வாயுவாறு எண்ணும் வட்ட மேவியே உதிரந்தான் வரைகள்எட்டும் எண்ணுமென் சிரசின்மேல் கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே. நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின் மேலுபத்து மாறுடன் மேதிரண்ட தொன்றுமே கோலிஅஞ் செழுத்துளே குருவிருந்து கூறிடில் தோலுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோசமே. நாடிநாடி உம்முளே நயந்துகாண வல்லிரேல் ஓடியோடி மீளுவார் உம்முளே அடங்கிடும்...