У нас вы можете посмотреть бесплатно SIVAVAAKIYAR SITHER PAADALGAL PART 7 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
SIVAVAAKIYAR SITHER PAADALGAL PART 7 #சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் பகுதி-7 #sivavakkiyar #song #creator #saravananarunachalam #sunomusic #music #sither #sither padalgal#sunoai #sunov5 # Clipchamp எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் என்பிரான் கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவை நீ நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.. சொல்லுவேன் சிவவாக்கியம்.... சொல்லுவேன் சிவவாக்கியம்..ஓம் நமச்சிவாய.. தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே எல்லையைக் கடந்துநின்ற ஏகபோக மாய்கையே எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே. உடம்புயிர் எடுத்ததோ உயிருடம்பு எடுத்ததோ உடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர் உடம்புயிர் எடுத்தபோதஉயிஇறப்ப தில்லையே உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு மாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும்உவ்வு மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே. மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர் மந்திரங்க ளாவது மறத்திலூற லன்றுகாண் மந்திரங்க ளாவது மதத்தெழுந்த வாயுவை மந்திரத்தை உண்டவர்க்கு மானமேதும் இல்லையோ. என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை பன்னுகின்ற செந்தமிழ் பதங்கடந்த பண்பென மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல் என்னகத்துள் ஈசனும் யானுமல்ல இல்லையே. ஆலவித்தில் ஆல்ஓடுங்கி ஆலமான வாறுபோல் வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர் ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்ததே பாருமித்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே. அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய் எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால் அவ்வுமுவ்வும் அவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே. நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய் சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய் யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்துநின்ற நேர்மையில் செவ்வைஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே. இரண்டுமொன்று மூலமாய் இயங்குசக் கரத்துளே சுருண்டுமூன்று வளையமாய்ச் சுணங்குபோல் கிடந்ததீ முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி ஊடுபோய் அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே. கடலிலே திரியும்ஆமை கரையிலேறி முட்டையிட்டுக் கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல் மடலுளே இருக்கும்எங்கள் மணியரங்க சோதியை உடலுளே நினைத்துநல்ல உண்மையானதுஉண்மையே. மூன்று மண்டலத்தினும் முட்டிநின்ற தூணிலும் நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம் ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்லவெங்கும் இல்லையே. மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும் மூன்றுமஞ் சும்எழுத்துமாய் முழங்குமவ் எழுத்துளே ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும் தோன்றுமண்டத்திலே சொல்லவெங்கும் இல்லையே. சோறுகின்ற பூதம்போல் சுணங்குபோல் கிடந்தநீர் நாறுகின்ற கும்பியில் நவின் றெழுந்த மூடரே சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லிரேல் ஆறுகோடி வேணியார் ஆறிலொன்றில் ஆவிரே. எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் என்பிரான் கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவை நீ நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.. சொல்லுவேன் சிவவாக்கியம்.... சொல்லுவேன் சிவவாக்கியம்..ஓம் நமச்சிவாய.