У нас вы можете посмотреть бесплатно திருவையாறு / கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை / திருஞானசம்பந்தர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
02.006 திருவையாறு | கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை | திருஞானசம்பந்தர் தேவாரம் #NalamTharumThirumuraiPathigam | #AiyaarapparTemple | #Thiruvaiyaru | #Thirugnanasambandhar | #Thevaaram அறம் வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற சிவஸ்தலங்கள் திருவெண்காடு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர் மற்றும் திருவாஞ்சியம். அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம். சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் "ஓலமிட்ட விநாயகர்" என்று அழைக்கப்படுகிறார். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஐயாரப்பர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய "மாதர்பிறைக் கண்ணியானை' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலை நாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் "ஐயாறப்பா" என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம். இவ்வாறு அப்பர் பிரான் கண்ட கயிலாயக் காட்சியினை தன் பதிகத்தில் மிகவும் விவரித்துக் கூறுகிறார். கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர் ஓடு கங்கை ஒளிவெண்பிறை சூடும் ஒருவனார் பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே ஆடுமாறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே. ..... (01) தன்மை யாரும் அறிவார் இல்லை தாம் பிறர் எள்கவே பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர் துன்ன ஆடை உடுப்பர் சுடலைப் பொடி பூசுவர் அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே. ..... (02) கூறு பெண் உடை கோவணம் உண்பது வெண்தலை மாறில் ஆரும் கொள்வார் இல்லை மார்பில் அணிகலம் ஏறும் ஏறித் திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே. ..... (03) பண்ணின் நல்ல மொழியார் பவளத்துவர் வாயினார் எண்ணில் நல்ல குணத்தார் இணைவேல் வென்ற கண்ணினார் வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே. ..... (04) வேனல் ஆனை வெருவவுரி போர்த்து உமை அஞ்சவே வானை ஊடு அறுக்கும் மதிசூடிய மைந்தனார் தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி ஆனஞ்சு ஆடும் முடியானும் ஐயாறு உடை ஐயனே. ..... (05) எங்குமாகி நின்றானும் இயல்பு அறியப்படா மங்கை பாகம் கொண்டானும் மதிசூடு மைந்தனும் பங்கமில் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே. ..... (06) ஓதி யாரும் அறிவார் இல்லை ஓதி உலகெலாம் சோதியாய் நிறைந்தான் சுடர்ச்சோதியுள் சோதியான் வேதியாகி விண்ணாகி மண்ணோடு எரி காற்றுமாய் ஆதியாகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே. ..... (07) குரவ நாண்மலர் கொண்டு அடியார் வழிபாடு செய் விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே பரவி நாள்தொறும் பாட நம் பாவம் பறைதலால் அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே. ..... (08) உரைசெய் தொல்வழி செய்தறியா இலங்கைக்கு மன் வரைசெய் தோள் அடர்த்து மதிசூடிய மைந்தனார் கரைசெய் காவிரியின் வடபாலது காதலான் அரைசெய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே. ..... (09) மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான் காலம் காம்பு வயிரம் கடிகையன் பொற்கழல் கோலமாய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டதோர் ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே. ..... (10) கையில் உண்டு உழல் வாரும் கமழ் துவர் ஆடையால் மெய்யைப் போர்த்து உழல் வாரும் உரைப்பன மெய்யல மைகொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே. ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே. ..... (11) பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை கலி கடிந்த கையான் கடல் காழியர் காவலன் ஒலிகொள் சம்பந்தன் ஒண்தமிழ் பத்தும் வல்லார்கள் போய் மலிகொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே. ..... (12) பதிகப் பலன் : பலி ஏற்று உழல்பவனாய், பாண்டரங்கக் கூத்தாடும் பெருமான் எழுந்தருளிய திருவையாற்றினை உலகில் கலிவாராமல் கடியும் வேள்வி செய்தற்கு உரிமை பூண்ட திருக்கரங்களை உடைய, கடலை அடுத்துள்ள காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் இசையொலி கூடிய சிறந்த தமிழால் பாடிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் புகழ் மலிந்த வானுலகில் நிலையான சிறப்பைப் பெறுவார்கள். குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"